கன்னியாகுமரியில் சீசன் களை கட்டியது: கூட்டம் அலைமோதுகிறது

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் சீசன் களைகட்டியுள்ளது. எந்தப் பக்கம் திரும்பினாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம்.

கன்னியாகுமரியில் வழக்கமாக கோடை காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். குறிப்பாக சனி, ஞாயிற்று கிழமைகளில் இந்த கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்ததிலிருந்தே சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இன்றும் காலை முதலே விவேகானந்தர் பாறைக்கு செல்ல படகு டிக்கெட் வாங்குவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வருகின்ற சுற்றுலா பயணிகளின் வசதிக்காக படகு டிக்கெட் வாங்குவதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு சிலர் வேண்டுகோள் விடுத்தனர்.

லாட்ஜிகளிலோ அல்லது டிராவல்ஸ் மூலமாகவோ இந்த படகு டிக்கெட் வழங்கப்பட்டால் சுற்றுலா பயணிகள் வெயிலில் காத்திருக்க வேண்டியதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+