18ம் தேதி தி.நகரில் கவியரசு கண்ணதாசன் விழா
சென்னை: சென்னை சர்.பி.டி தியாகராயர் அரங்கில் பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் சார்பில் கவியரசு கண்ணதாசன் விழா வரும் 18ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடக்க உள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள சர்.பி.டி.தியாகராயர் அரங்கில் வரும் 18ம் தேதி மாலை 5.30 மணிக்கு பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் சார்பில் கவியரசு கண்ணாதாசன் விழா நடைபெற உள்ளது.
அப்போது கண்ணதாசன் விருது வழங்கும் விழா-2011, 'வாழும் தமிழே வாலி' நூல் வெளியீட்டு விழா, வழிகாட்டி மையம் தொடக்க விழா மற்றும் பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் 20வது ஆண்டு நிறைவு விழா ஆகிய விழாக்கள் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவிய அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அந்த சங்கத்தின் நிறுவனரும், பொது செயலாளருமான காவிரிமைந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications