கொடைக்கானல் கோடைவிழா மே 28-ம் தேதிக்கு மாற்றம்: அமைச்சர் விசுவநாதன் துவக்கி வைப்பு
Subscribe to Oneindia Tamil

தற்போது கோடை காலம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு சாரைசாரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வண்ணம் கொடைக்கானலில் ஆண்டு தோறும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வரும் 27-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரை கோடைவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது கோடை விழா வரும் 28-ம் தேதி தொடங்கி ஜூன் 4-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.விசுவநாதன் தொடங்கி வைக்கிறார்.
மே 28, 29 ஆகிய தேதிகளில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு படகுப்போட்டி, விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications