ரியாத் நகரில் மறைமலையடிகளார் விழா
Subscribe to Oneindia Tamil
கடந்த 8ம் தேதி மாலை ரியாத் நகரில் வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கம் (வசெந்தம்) சார்பாக மறைமலையடிகளார் விழா கொண்டாடப்பட்டது.
மாலை ஐந்து மணிக்கு தொடங்கப்பட்ட விழாவில் தனியர்களுக்காக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மறைமலையடியார்களைப் பற்றிய சிறப்புரை, நாட்டுப்புறப்பாடல், கரகாட்டம், ஒயிலாட்டம், சிறப்பு நாடகம் நடைபெற்றன. மறைமலையடிகளாரின் வாழ்க்கை குறித்து நடந்த வினாடி வினா நிகழ்ச்சியில் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றுச் சரியான விடையளித்தனர்.
பரிசளிப்பிற்குப் பிறகு இரவு 9.30 மணியளவில் நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே முடிவடைந்தது. ரியாத் வாழ் தமிழர்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தகவல் உதவி: இ. அழகப்பன், செயலாளர், வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கம்













Click it and Unblock the Notifications