தனியார் வனப் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு: சிபிஎம் எம்எல்ஏக்கள் குமரியில் பாதயாத்திரை
அருமனை: தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து குமரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2 எம்எல்ஏக்கள் தலைமையில் பாதயாத்திரை தொடங்கியது.
குமரி மாவட்ட மக்களை பாதிக்கும் தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2 நாட்கள் பாதயாத்திரை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று காலை குமரி மாவட்டத்தின் வெள்ளச்சிபாறை சந்திப்பில் ஜான்ஜோசப் எம்எல்ஏ தலைமையிலான பாதயாத்திரையை மாவட்டக் குழு உறுப்பினர் ராமசந்திரன் தொடங்கி வைத்தார்.
பாதயாத்திரை குழு தனிச்சமூடு, சிதறால், அம்பலக்கடை வழியாக நேற்று இரவு அருமனை சந்திப்பை அடைந்தது. தொடர்ந்து இன்று காலை அருகாணியில் இருந்து புறப்பட்டு பத்துகாணி, மருதம்பாறை, ஆலஞ்சோலை, கடையல், கட்டான்விளை, செங்குழிகரை வழியாக களியல் சந்திப்பில் பாதயாத்திரை நிறைவடைகிறது.
மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது யாத்திரையை முடித்து வைக்கிறார். இதேபோல் திற்பரப்பில் இருந்து லீ்மாரோஸ் தலைமையில் பாதயாத்திரை புறப்பட்டது. இதை மாவட்ட செயலாளர் முருகேசன் தொடங்கி வைத்தார். இக்குழுவினர் குலசேகரம், பொன்மனை, ஆயக்கோடு, கல்லடி மாமூடு வழியாக நேற்று மாலை திருவட்டாரில் பாதயாத்திரையை நிறைவு செய்தனர்.
தொடர்ந்து இன்று ஆத்தூர் சந்திப்பில் தொடங்கி வேர்கிளம்பி, சித்தரங்கோடு, குமாரபுரம், மேக்காமண்டபம் வழியாக தக்கலையில் நிறைவடைகிறது.












Click it and Unblock the Notifications