மண்டல, மகர விளக்கு சீசன் முடிந்தவுடன் மாஸ்டர்பிளான் நிறைவேற்றப்படும்: உம்மன் சாண்டி
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: மண்டல, மகர விளக்கு சீசன்கள் முடிந்தவுடன் சபரிமலை மாஸ்டர் பிளான் நிறைவேற்றப்படும் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவி்த்துள்ளார்.
மண்டல கால பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 16ம் தேதி திறக்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆலோசனை கூட்டம் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் பம்பையில் நடந்தது.
இக்கூட்டத்தில் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் முதல்வர் உம்மன்சாண்டி நிருபர்களிடம் கூறியதாவது,
இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு கால சீசன் நிறைவடைந்தவுடன் சபரிமலை மாஸ்டர் பிளான் நிறைவேற்றப்படும். சபரிமலைக்கு அனுமதிக்கப்பட்ட வழிகள் தவிர பக்தர்கள் மாற்று பாதைகளில் செல்ல அனுமதி கிடையாது. இந்த பாதைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications