சுகப்பிரசவம் தரும் முடக்கற்றான்

Subscribe to Oneindia Tamil

Mudakkatran
மூட்டுக்களை முடக்கி வைக்கும் மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் என இத்தாவரம் பெயர் பெற்றுள்ளது. இதன் இலை, தண்டு, வேர் உள்ளிட்ட அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது. இந்தியா முழுவதும் வீட்டின் வேலிகளின் ஓரங்களில் பற்றி படர்ந்திருக்கும் இந்த கொடி குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில்தான் நன்கு செழித்து வளரும்.

“சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி"

என்று சங்க இலக்கத்தியத்தில் முடக்கற்றானைப்பற்றி கூறப்பட்டுள்ளது.

கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு
அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடும் என்று இந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடங்கியுள்ள சத்துக்கள்

முடக்கற்றான் இலையில் அதிக அளவு ஈரப்பதமும் புரதச்சத்து, கொழுப்புச் சத்து, மாவு சத்து, தாது சத்து, சக்தி கலோரி முதலியவை அடங்கியுள்ளன.

சுகப்பிரசவம் ஏற்பட

பிரசவம் என்பது பெண்களுக்கு மறுஜென்மம் போன்றது. இன்றைய சூழலில் சுகப்பிரசவம் என்பது எட்டாக்கனியாகி வருகிறது. சிசேரியன் மூலம் மகப்பேறு மருத்துவ மனைகளில் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது பல ஆயிரம் பணச் செலவு என்றாகிவிட்டது. பண்டைய காலத்தில் சுகப்பிரசவம் ஆக முடக்கற்றான் இலையை பயன்படுத்தியுள்ளனர். இதன் இலையை நன்கு அரைத்து பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ ஏற்படாது. மருத்துவமனை அருகிலில்லாத கிராமங்களில் உள்ள மருத்துவம் பார்க்கும் பெண்களும், பாட்டிகளும் இந்த முறையையே கையாண்டு வருகின்றனர். மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்பட முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு பெண்களுக்கு ஒழுங்காக வரும்.

முடக்குவாத பிரச்சினை

முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நாள் பட்ட மூட்டு வழிகளுக்கும் விடிவு ஏற்படும். இதன் இலையை இடித்துப் பிழிந்து சாறு எடுத்து இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி,காதில் இருந்து சீழ் வடிவது போன்றவை நீங்கும்.

பாரிச வாயு நீங்கும்

மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி சுண்ணாம்பு, பாஸ்பரம் படிவங்கள்தான் "பாரிச வாயு" எனும் கைகால் முடக்கு வாதம் ஆகும். இவற்றைக் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.

கைப்பிடியளவு முடக்கற்றான் இலையைக்கொண்டு வந்து நைத்து ஒரு சட்டியில் போட்டு இதே அளவு வேலிப்பருத்தி இலையையும், சூரத்து ஆவரையிலையையும் இத்துடன் சேர்த்துஇரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வடிகட்டிக் காலைவேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால்பாரிச வாய்வு குணமாகும். தேவையானால் மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடி 3 நாளாக மூன்று முறை கொடுத்து வந்தால், பாரிசவாய்வு பூரணமாகக் குணமாகும்.

மூலநோய் குணமடையும்

முடக்கற்றான் வேரை உலர்த்தி பின்னர் முறைப் படி குடி நீர் அருந்திவர நாள் பட்ட மூல நோய் குணமாகும்.மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால்உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலர்ச்சிக்கல் தொடர்புடைய அனைத்து பிரச்சினைகளும் நீங்கும்.

முடி உதிர்வதை தடுக்கும்

வாரம் ஒரு முறை முடக்கற்றான் கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் கொண்டு 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து வரவும்; முடி கொட்டுவதும் நின்று விடும்; இது நரை விழுவதைத் தடுக்கும்; கருகருவென முடி வளரத் தொடங்கும்

இதன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கீல்களில் வரும் வாதத்திற்கு வீககத்திற்க்கு வைத்துக் கட்ட குணமாகும் .அதிகப் பணச்செலவில்லாத வைத்தியமாக இருப்பதால் சற்றுக் கவர்ச்சி இல்லாமல் இருக்கக்கூடும்;

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+