வெளிநாட்டுப் பறவைகளை ஏமாற்றிய நாங்குநேரி குளங்கள்
நாங்குநேரி: நாங்குநேரி பகுதியில் உள்ள குளங்களில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் வெளிநாட்டு பறவைகள் ஏமாற்றம் அடைந்துள்ளன.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கூத்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் சீனா, இலங்கை, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வரும். அவைகள் அங்குள்ள குளங்களில் உள்ள மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து பின்னர் புதிதாக பிறந்த குஞ்சுகள் பறக்க துவங்கியதும் தங்கள் நாட்டிற்கு திரும்புவது வழக்கம்.
உணவிற்காக அப்பறவைகள் கூத்தன்குளத்தை மட்டும் நம்பியிராமல் நாங்குநேரியை சுற்றியுள்ள சுமார் 50கிலோ மீட்டருக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள குளங்களுக்கும் சென்று இரை தேடுவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் அளவு குறைவாக உள்ளதால் நாங்குநேரி குளங்களில் நீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து கூட்டம், கூட்டமாக வந்துள்ள பறவைகள் இரை தேடி அங்குள்ள குளங்களுக்கு செல்கின்றன. அங்கு போதிய இரை கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றன.












Click it and Unblock the Notifications