சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று நாட்டியாஞ்சலி விழா

ஆண்டுதோறும் மகா சிவராத்திரி தினத்தன்று நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கும். 5 நாள் நடைபெறும் இந்த நிழ்ச்சியில் உலகெங்கிலுமிருந்து பல்வேறு கலைஞர்கள் கலந்து கொண்டு நடராஜர் சன்னதியில் நடனமாடி தங்களது பக்தியை வெளிப்படுத்துவர்.
இன்று மாலை 5.30 மணிக்கு 30வது நாட்டியாஞ்சலி விழா தொடங்குகிறது. கிருஷ்ணசாமி தீட்சிதர் தலைமை தாங்குகிறார். டெல்லி சங்கீதா நாடக அகாடமி தலைவர் லீலா சாம்சன் தொடங்கி வைக்கிறார்.
5.45 மணிக்கு அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிகள் பரதம், 6.10 மணிக்கு சென்னை திவ்யா சங்கர் பரதம், 6.35 மணிக்கு மும்பை சரபோஜி ராஜே போஸ்லே மையம் மாணவ மாணவிகள் பரதம், 7.10 மணிக்கு பரதசூடாமணி நடனப்பள்ளி மாணவிகள் பரதம் நடக்கிறது.
இரவு 8.15 மணிக்கு புகழ் பெற்ற பரத கலைஞர் பத்மா சுப்பிரமணியம் பரதநாட்டியம் நடக்கிறது. அதையடுத்து சென்னை காயத்ரி பாலகுருநாதன் நாட்டிய நாடகம், சென்னை கனகசபை நடனப்பள்ளி மாணவ மாணவிகள் திருவாசகம் நாட்டிய நாடகம், டாக்டர் ராகவன் நிகழ்கலைகள் மைய மாணவர்களின் பரதம், நிருத்ய சங்கமம் ஆடல் கலைஞர்கள் பரதம், மோகினி ஆட்டம், ஒடிஸி, கதகளி, குச்சிப்புடி, கதக், மணிபுரி, சத்ரீயா ஆகிய நாட்டியங்கள் ஒரே நேரத்தில் நடக்கின்றன.
நாட்டியாஞ்சலி விழாவையொட்டி சிறப்பு பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications