மார்ச் 2ல் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா துவக்கம்

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் 30வது நாட்டியாஞ்சலி விழா வரும் மார்ச் மாதம் 2-ம் தேதி துவங்குகிறது.

சிதம்பரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் சிவாராத்திரியையொட்டி நாட்டியாஞ்சி விழா நடத்தப்படுகிறது. தொடர்ந்து 5 நாட்கள் நடக்கும் இந்த நாட்டியாஞ்சலி விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபலமான பரத, கதக், ஒடிசி, குச்சிப்புடி நடனக் கலைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் நாட்டியத்தை இறைவனுக்கு அர்ப்பணிப்பர்.

இந்தியா தவிர்த்து அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற பல்வேறு நாட்டில் உள்ள பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு நடன அஞ்சலி செலுத்துவர்.

இந்த ஆண்டு 30-வது நாட்டியாஞ்சலி விழா மகாசிவராத்திரியான மார்ச் மாதம் 2-ம் தேதி துவங்குகிறது. அன்று மாலை 5.30 மணிக்கு மங்கள இசையுடன் நாட்டியாஞ்சலி விழா துவங்குகிறது. இதற்கு கிருஷ்ணசாமி தீட்சிதர் தலைமை தாங்குகிறார். விழாவை புதுடெல்லி சங்கீத நாடக அகாடமி தலைவர் லீலா சாம்சன் தொடங்கி வைக்கிறார். இதில் நெய்வேலி என்.எல்.சி. சேர்மன் அன்சாரி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

முன்னதாக 5.45 மணிக்கு அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிகள் பரதம், 6.10 மணிக்கு சென்னை திவ்யா சங்கர் பரதம், 6.35 மணிக்கு மும்பை சரபோஜி ராஜே போஸ்லே மையம் மாணவ மாணவிகள் பரதம், 7.10 மணிக்கு பரதசூடாமணி நடனப்பள்ளி மாணவிகள் பரதம் நடக்கிறது.

தொடர்ந்து 8.15 மணிக்கு புகழ் பெற்ற பரத கலைஞர் பத்மா சுப்பிரமணியம் பரதநாட்டியம் நடக்கிறது. அதையடுத்து சென்னை காயத்ரி பாலகுருநாதன் நாட்டிய நாடகம், சென்னை கனகசபை நடனப்பள்ளி மாணவ மாணவிகள் திருவாசகம் நாட்டிய நாடகம், டாக்டர் ராகவன் நிகழ்கலைகள் மைய மாணவர்களின் பரதம், நிருத்ய சங்கமம் ஆடல் கலைஞர்கள் பரதம், மோகினி ஆட்டம், ஒடிஸி, கதகளி, குச்சிப்புடி, கதக், மணிபுரி, சத்ரீயா ஆகிய நாட்டியங்கள் ஒரே நேரத்தில் நடக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+