புதுவை என்றால் பாவேந்தர்...!

புதுவை என்றால் பாவேந்தர் பாரதிதாசன் அனைவரின் நினைவுக்கும் வருவார். எழுச்சி மிக்க தமிழ்க்கவிதைகளால் கற்றோர் நெஞ்சில் இடம்பிடித்தவர். தமிழகத்தில் கிளர்ந்தெழுத்த தமிழ் உணர்வுக்கு அவர் பாடல்கள் பெரும் பங்களிப்பு செய்தன. பாவேந்தர் வழியில் பாட்டெழுதும் ஒரு பெரும் படையே உருவானது. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை உலகில் பாவேந்தரின் தாக்கம் மிகுதி.
புதுவைத் தொடர்பு 1992 ஆம் ஆண்டு முதல் எனக்கு உண்டு. பாவேந்தர் தொடர்பான தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வுமேற்கொண்ட காலம் முதல் அவரின் நினைவில்லம் சென்று பார்வை நூல்களைப் பார்ப்பது, படி எடுப்பது என்று தொடர்ந்து பாவேந்தர் ஆய்வுகளில் கவனம் செலுத்தி வருகின்றேன்.
நேற்று(19.02.2011) பாவேந்தர் நினைவில்லத்தில் பல நூல்களைப் பார்வையிடச் சென்றிருந்தேன். புதுவையின் துளிப்பா முன்னோடிப் பாவலர் சீனு. தமிழ்மணி அவர்களும் வந்திருந்தார். எங்கள் பணிகளை முடித்துக்கொண்டு வெளயே வந்தோம். பாவேந்தர் மறைவுற்றபொழுது அவரை அடக்கம் செய்த நன்காட்டைப் பார்வையிடவேண்டும் என்றேன். பலநாள் நினைத்தும் பணி நெருக்கடிகளுக்கு இடையே என் எண்ணம் கனியாமல் இருந்தது.
அவரும் நானும் புதுவைக் கடற்கரை ஒட்டியப் பாப்பம்மாள் கோயில் வீதியில் இருந்த நன்காட்டை அடைந்தோம்.அங்குப் பல கல்லறைகள் உள்ளன. தமிழகத்தின் எழுச்சி மிக்க பாவலரான பாவேந்தர் மீளாத் துயில்கொள்ளும் இடம் கண்டு செஞ்சுக்குள் அகவணக்கம் செலுத்தினேன். பார்வையிடாத அன்பர்களுக்காகச் சில படங்கள் எடுத்துவந்தேன்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாவேந்தரின் பிறந்த நாள், மறைந்தநாள் வருகின்றன.
நன்றி: http://muelangovan.blogspot.com/
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications