பேராசிரியர் சுபாஷ்சந்திரபோஸுக்கு இலக்கிய விருது!
மன்னார்குடி: மன்னார்குடி செங்கமலத்தாயார் மகளிர் கல்வி அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் இலக்கிய விருதும், ரூ.50,000 ரொக்கப் பரிசும் பேராசிரியர் சுபாஷ்சந்திரபோஸுக்கு வழங்கப்பட்டது.
மன்னார்குடி செங்கமலத்தாயார் மகளிர் கல்வி அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய படைப்பாளர்களுக்கு ரூ. 50,000 ரொக்கப் பரிசுடன் கூடிய இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த கீழையூர் கிராமத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுபாஷ்சந்திரபோஸின் படைப்புகள் இந்த இலக்கிய விருதுக்காக தேர்வு செய்யபட்டன.
செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. அம்பிகாபதி தலைமைமை வகித்தார். அறக்கட்டளை தாளாளர் டாக்டர் திவாகரன், கல்லூரி முதல்வர் அமுதா உள்ளிட்டோர் முன்னிலையில் பேராசிரியர் சுபாஷ்சந்திரபோஸுக்கு இலக்கிய விருதும், ரூ.50,000 ரொக்கப்பரிசும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த விழாவில் மன்னார்குடியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.