புலிகள் காப்பகமாக அறிவிக்கப்படுகிறது சத்தி வனப்பகுதி
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி, புலிகள் வனக் காப்பகமாக அறிவிக்கப்படவுள்ளது.
புரொஜக்ட் டைகர்
சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் சுமார் 40,000 புலிகள் இருந்தன. தொடர்ந்த வேட்டை மற்றும் வனப்பகுதிகள் அழிப்பின் காரணமாக, 1973ல் புலிகளின் எண்ணிக்கை 1,800 ஆக குறைந்தது.
புலிகளைக் காக்கும் வகையில் அவ்வாண்டு 'புரொஜக்ட் டைகர்" எனும் திட்டம் மத்திய அரசால் துவக்கப்பட்டது. ஆனபோதும், புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியவில்லை. 2006ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 1,411 புலிகளே இந்தியாவில் இருந்தன.
கணக்கெடுப்பு
புரொஜக்ட் டைகர் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த துவங்கியது மத்திய அரசு. அதன்படி, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியா முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் புலிகளின் கணக்கெடுப்பு நடைபெறும். 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை 1,706ஆக உயர்ந்தது கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் 2006ல் 68 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2010ல் நூற்றுக்கும் மேல் உயர்ந்தது தெரிய வந்தது.
புலிகள் காப்பகம்
ஒரு வன டிவிஷனில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட புலிகள் இருப்பதாக தெரிய வந்தால் அவ்வனப்பகுதியை அரசு புலிகள் காப்பகமாக அறிவித்து விடும். ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட சத்தி டிவிஷனில் ஆறு முதல் எட்டு புலிகள் வரை இருப்பதாக வனத்துறையின் கணக்கெடுப்பில் தெரியவந்தது.
எனவே, இப்பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்க கடந்த ஆண்டே மத்திய சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்தார். ஆனால், அப்போதைய திமுக அரசு சத்தி டிவிஷனை புலிகள் காப்பகமாக அறிவிக்கவில்லை.
விரைவில் அறிவிப்பு வெளியாகும்
இந்நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஈரோடு வனத்துறையினர் தேசிய அளவில் 42வது புலிகள் காப்பகமாக சத்தி டிவிஷன் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடும் எனத் தெரிவித்தார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications