புலிகள் காப்பகமாக அறிவிக்கப்படுகிறது சத்தி வனப்பகுதி
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி, புலிகள் வனக் காப்பகமாக அறிவிக்கப்படவுள்ளது.
புரொஜக்ட் டைகர்
சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் சுமார் 40,000 புலிகள் இருந்தன. தொடர்ந்த வேட்டை மற்றும் வனப்பகுதிகள் அழிப்பின் காரணமாக, 1973ல் புலிகளின் எண்ணிக்கை 1,800 ஆக குறைந்தது.
புலிகளைக் காக்கும் வகையில் அவ்வாண்டு 'புரொஜக்ட் டைகர்" எனும் திட்டம் மத்திய அரசால் துவக்கப்பட்டது. ஆனபோதும், புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியவில்லை. 2006ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 1,411 புலிகளே இந்தியாவில் இருந்தன.
கணக்கெடுப்பு
புரொஜக்ட் டைகர் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த துவங்கியது மத்திய அரசு. அதன்படி, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியா முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் புலிகளின் கணக்கெடுப்பு நடைபெறும். 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை 1,706ஆக உயர்ந்தது கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் 2006ல் 68 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2010ல் நூற்றுக்கும் மேல் உயர்ந்தது தெரிய வந்தது.
புலிகள் காப்பகம்
ஒரு வன டிவிஷனில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட புலிகள் இருப்பதாக தெரிய வந்தால் அவ்வனப்பகுதியை அரசு புலிகள் காப்பகமாக அறிவித்து விடும். ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட சத்தி டிவிஷனில் ஆறு முதல் எட்டு புலிகள் வரை இருப்பதாக வனத்துறையின் கணக்கெடுப்பில் தெரியவந்தது.
எனவே, இப்பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்க கடந்த ஆண்டே மத்திய சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்தார். ஆனால், அப்போதைய திமுக அரசு சத்தி டிவிஷனை புலிகள் காப்பகமாக அறிவிக்கவில்லை.
விரைவில் அறிவிப்பு வெளியாகும்
இந்நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஈரோடு வனத்துறையினர் தேசிய அளவில் 42வது புலிகள் காப்பகமாக சத்தி டிவிஷன் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடும் எனத் தெரிவித்தார்கள்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications