சமையல் எண்ணெயிலும் ஷேவிங் செய்யலாம்-நெல்லை பேராசிரியரின் கண்டுபிடிப்பு
நெல்லை: அன்றாடம் உபயோகிக்கும் சமையல் எண்ணெய், மற்றும் சம அளவு தண்ணீர் இருந்தாலே போதும் ஷேவிங் கீரிம் இல்லாமலேயே ஷேவிங் பண்ணலாம். இதனால் நரை முடியை கட்டுபடுத்த முடியும் என நெல்லை பல்கலை பேராசிரியர் கண்ணன் தெரிவித்தார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வேதியியல் துறை பேராசிரியர் கண்ணன் நெல்லையில் நிருபர்களிடம் பேசுகையில்,
ஆண்கள் முகத்தில் ஷேவிங் பண்ணுவதற்கு கீரிம் மற்றும் நோய் தடுப்பு திரவத்தை பயன்படுத்துகிறார்கள். இதில் உள்ள வேதிப்பொருட்களால் இளமையிலேயே முகத்தில் உள்ள முடி நரைக்க துவங்கி விடும்.
வியர்வை வெளியேற்றம் தடைபடுவதால் உடல் வெப்பம் அதிகரிக்கும். தூக்கமின்மை, கண் எரிச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். ஷேவிங் கீரிமை உபயோகிக்கப்படுத்துவதால் அதில் உள்ள வேதிப் பொருட்கள் உணவு குழாய், பித்தப்பை, சிறுநீர் பை ஆகியவற்றில் புற்று நோயை உண்டாக்கும். நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். தோலில் பாதிப்பு ஏற்படும்.
நம் அன்றாடம் பயன்படுத்தும் தாவர எண்ணெயும், சம அளவு தண்ணீரையும் சேர்ந்து கலவையை கீரிமாக பயன்படுத்தலாம். இந்த கலவை உராய்வு நீக்கியாக பயன்படுத்தலாம். இவை முகத்தில் உள்ள தசைகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இந்த திரவத்துக்கு கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளதால் முக சவரத்துக்கு பின் நோய் தடுப்பு திரவத்தை பயன்படுத்த தேவையில்லை. மேலும் இந்த கலவையை பயன்படுத்தி சேவிங் செய்தால் பிளேடின் செயல்திறனும் அதிகரிக்கும். பொருளாதார வகையிலும் இது மலிவானது.
இதனை உபயோகிப்பதின் மூலம் இளநரை கூட கருமையாக மாறும். இயற்கையான சேவிங் கீரிம் செய்வது மிகவும் எளிது.
தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், போன்ற ஏதாவது ஓரு எண்ணெய்யையும், சம அளவு தண்ணீரையும் கலக்க வேண்டும். முகத்தில் சவரம் செய்ய வேண்டிய இடத்தில் இந்த எண்ணெய்யை தேய்க வேண்டும். சிறிது நேரம் கழித்து சேவிங் செய்யலாம். இந்த கலவையை பயன்படுத்துவதால் சுற்று சூழல் பாதிக்காது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications