சென்னையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. திருவுருவச்சிலை திறப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் திருவுருவச்சிலையை தியாகராயநகர் போக் ரோடு சந்திப்பில் முதல்வர் கருணாநிதி வரும் 9ம் தேதி திறந்து வைக்கிறார்.
சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் திருவுருவச்சிலை சென்னையில் நிறுவப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவி்த்திருந்தது. அதன்படி ரூ. 6 லட்சம் செலவில் 8 அடி உயர வெண்கலச் சிலை செய்யும் பணி நடந்து வந்தது. இதற்கான பொறுப்பு சிற்பி கிஷோர் நாகப்பாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது சிலை செய்யும் பணி நிறைவடைந்துவிட்டது. இதையடுத்து ம.பொ.சி. முழு உருவச்சிலையை வரும் 9ம் தேதி மாலை 5. 30 மணிக்கு சென்னை, தியாகராயநகர் போக் ரோடு சந்திப்பில் தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார் என்று தமிழக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications