கேரளாவில் தொடங்கியது தென் மேற்குப் பருவமழை-2 நாட்களில் தமிழகத்தில்
திருவனந்தபுரம்: தென் மேற்குப் பருவ மழை நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றே கேரளாவில் மழை தொடங்கி விட்டது. அதேபோல லட்சத்தீவிலும் இன்று மழை தொடங்கியது. இன்னும் ஓரிரு நாட்களில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளிலும் மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முன்னதாக வானிலை ஆய்வு மையத் தகவல் கூறுகையில்,
அந்தமானி்ல் இன்றோ அல்லது நாளையோ தென்மேற்கு பருவமழை துவங்கலாம். அடுத்த மூன்று நாட்களில் அதாவது ஜூன் முதல் தேதி கேரளாவில் பருவ மழை துவங்கி விடும். அதற்கேற்ற சாதகமான சூழ்நிலைகள் உள்ளன.
அந்தமானி்ல் வழக்கமாக மே 15ம்தேதி முதல் 20ம் தேதிக்குள் பருவமழை துவங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக துவங்குகிறது. இந்த தாமதத்தால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்குவதில் பிரச்சனை ஏற்படாது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்றே கேரளாவிலும், லட்சத்தீவிலும் தென் மேற்குப் பருவ மழை தொடங்கி விட்டது.
இந்த மழை மேலும் விரிவடைந்து கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த ஓரிரு நாட்களில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை தொடங்கியிருப்பதால் அடுத்த 24 மணி நேரத்தி்ல பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யும் என கேரளாவுக்கு வானிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கேரளாவின் சில பகுதிகளில் மிக கனத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மே 31ம் தேதி வரை லட்சத்தீவில் 7 செமீ அளவிலான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் சாரல்
பருவ மழையின் தொடக்கமாக, நெல்லை மாவட்டம் குற்றாலம் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி அடிவாரப்பகுதியில் சாரல் மழை பெய்தது. சாரல் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications