கேரளாவில் தொடங்கியது தென் மேற்குப் பருவமழை-2 நாட்களில் தமிழகத்தில்
திருவனந்தபுரம்: தென் மேற்குப் பருவ மழை நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றே கேரளாவில் மழை தொடங்கி விட்டது. அதேபோல லட்சத்தீவிலும் இன்று மழை தொடங்கியது. இன்னும் ஓரிரு நாட்களில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளிலும் மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முன்னதாக வானிலை ஆய்வு மையத் தகவல் கூறுகையில்,
அந்தமானி்ல் இன்றோ அல்லது நாளையோ தென்மேற்கு பருவமழை துவங்கலாம். அடுத்த மூன்று நாட்களில் அதாவது ஜூன் முதல் தேதி கேரளாவில் பருவ மழை துவங்கி விடும். அதற்கேற்ற சாதகமான சூழ்நிலைகள் உள்ளன.
அந்தமானி்ல் வழக்கமாக மே 15ம்தேதி முதல் 20ம் தேதிக்குள் பருவமழை துவங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக துவங்குகிறது. இந்த தாமதத்தால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்குவதில் பிரச்சனை ஏற்படாது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்றே கேரளாவிலும், லட்சத்தீவிலும் தென் மேற்குப் பருவ மழை தொடங்கி விட்டது.
இந்த மழை மேலும் விரிவடைந்து கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த ஓரிரு நாட்களில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை தொடங்கியிருப்பதால் அடுத்த 24 மணி நேரத்தி்ல பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யும் என கேரளாவுக்கு வானிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கேரளாவின் சில பகுதிகளில் மிக கனத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மே 31ம் தேதி வரை லட்சத்தீவில் 7 செமீ அளவிலான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் சாரல்
பருவ மழையின் தொடக்கமாக, நெல்லை மாவட்டம் குற்றாலம் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி அடிவாரப்பகுதியில் சாரல் மழை பெய்தது. சாரல் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications