துபாயில் அறிவியல் தமிழறிஞருக்குப் பாராட்டு விழா
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் சார்பில் அறிவியல் தமிழறிஞர் பொறியாளர் எம். ஜே. முஹம்மது இக்பால் அவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி 10.03.2011 வியாழக்கிழமை மாலை அல் பரஹா சக்கீனா மஜ்லிஸில் நடைபெற்றது.
நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச்செயலாளர் சேமுமு. முஹமதலி அவர்கள் தனது வாழ்த்துரையில் பொறியாளர் எம்.ஜே. முஹம்மது இக்பால் அவர்கள் நாளிதழில் தொடர்ந்து எழுதி நூலாக வெளிவந்துள்ள அறிவியல் அதிசயம் தமிழகத்தின் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் இடம் பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
தொடர்ந்து அறிவியல் தமிழ் பணியில் இக்பால் அவர்களின் பணி சிறக்க வாழ்த்தி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
நிகழ்வில் திருச்சி பீர் முஹம்மது, திருச்சி முஹம்மது சாதிக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications