டாப் ஸ்லிப்பில் கனமழை: சுற்றுலா பயணிகள் வருகை குறைவ

Subscribe to Oneindia Tamil

Top Slip
பொள்ளாச்சி: டாப் ஸ்லிப் வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் சுத்தமாக இல்லை. மேலும், யானை சவாரியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

டாப் ஸ்லிப்

பொள்ளாச்சிக்கு அருகேயுள்ளது ஆனைமலை வனப்பகுதி. இங்குள்ள டாப் ஸ்லிப் தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாகும். இங்குள்ள மர வீடுகள், யானைச் சவாரி ஆகியவை சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்ப்பதாகும். இந்த ஆண்டும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்திருந்தனர்.

கன மழை

தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதால் டாப் ஸ்லிப் வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் யானை சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கன மழையும், யானைச் சவாரி நிறுத்தப்பட்டதும் சுற்றுலாப் பயணிகளின் வருகை சுத்தமாக குறைந்துள்ளது.

“யானை மேல் சுற்றுலாப் பயணிகளை அமர வைக்கப்படும் இருக்கை புல் மற்றும் தேங்காய் மஞ்சியால் செய்யப்பட்டது. இருக்கைகள் மழையில் நனைந்தால் அவற்றை உலர வைப்பது கடினம். யானை சவாரி நிரந்தரமாக நிறுத்தப்படவில்லை. மழை நின்றால் அடுத்த நாளே யானை சவாரி தொடரும்" என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+