துபாயில் வானலை வளர்தமிழின் கவியரங்கம், சிறப்பிதழ் வெளியீட்டு விழா

இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர் கோவை நந்தக்குமார் மற்றும் திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செல்வி ஆனிஷாவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்க, அமைப்பின் ஆலோசகர் காவிரிமைந்தன் வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடந்து சிறப்பு விருந்தினர்கள் வழக்கறிஞர் கோவை நந்தக்குமார், திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீனுக்கு அமைப்பின் சார்பில் கீழை ராஸா மற்றும் புதுவை ரமணி ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
தொடர்ந்து "ஏன்" இதழ் வெளியீட்டில் பிரதிகளை வழக்கறிஞர் நந்தக்குமார் வெளியிட முறையே ஜமால் முஹ்யித்தீன், ஃபாரூக், காதர் முகைதீன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.வாழ்த்துரை வழங்கிய ஜமால் முஹ்யித்தீன் அவர்கள் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து வியந்ததுடன் தானும் இதில் இணைந்து செயலாற்ற தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் நந்தக்குமார், அமைப்பின் செயல்பாடுகள் குறித்து பாராட்டியதுடன், வெளிநாடு வாழ் மக்களுக்காக சென்னையில் தான் ஆரம்பித்துள்ள இலவச வழிகாட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் பேசினார்.
அடுத்து முதுவை ஹிதாயத் அவர்களின் சிற்றுரையைத் தொடர்ந்து நடந்த கவியரங்கை கவிஞர் ஜியாவுதீன் பொறுப்பேற்று நடத்த, கவிஞர்கள் ஜெயராமன் ஆனந்தி, ஜெயா பழனி, சந்திரசேகர், காவிரிமைந்தன், காதர் முகைதீன், நர்கீஸ் ஜியா மற்றும் ஜியாவுதீன் ஆகியோர் கவிபாட கவியரங்கு இனிதே நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியை காவிரிமைந்தன் தொகுத்து வழங்கினார். தஞ்சாவூரான், காவிரிமைந்தன், சிம்மபாரதி மற்றும் ஜியாவுதீன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications