வைகோ எழுதிய வேலுநாச்சியார் நடன நாடகம்!
Subscribe to Oneindia Tamil

பரதாஸ்ரம் சார்பில் நடந்த இந்த பிரமாண்டமான தமிழ் வரலாற்று நடன நாடகத்துக்கு பிரபல பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
1730ம் ஆண்டு வாக்கில் வெள்ளையர்களை எதிர்த்து நின்ற தைரிய பெண்மணி வேலுநாச்சியார். 20 ஆண்டுகள் தனது ஆளுகைக்குட்பட்ட பகுதியில் நிம்மதியான ஆட்சியைத் தந்தார். இந்த வீர வரலாற்றை விளக்கும் வகையில் அமைந்த இந்த நாடகத்தில், ஒலியும், ஒளியும், காட்சி அமைப்புகளும், கலைஞர்களின் தத்ரூபமான நடிப்பும் அந்தக் கால நிகழ்வுகளை அப்படியே கண் முன் கொண்டு வந்தது.
தமிழ் இனத்தின் பெருமை, வீரத்தை பறைசாற்றுவதாக இருந்தன வைகோவின் வசனங்கள். நடனத்தைப் பார்க்க வந்திருந்தவர்கள், நாடகத்துடன் ஒன்றிப் போனதைப் பார்க்க முடிந்தது.
இந்த நாடகம் இன்னும் சில நகரங்களிலும் தொடர்ந்து நடக்க உள்ளது.












Click it and Unblock the Notifications