நாளை அபுதாபியில் அய்மான் சங்கத்தின் மீலாது பெருவிழா
அபுதாபி: அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் அண்ணல் எம்பெருமானார்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது உதய தின நிகழ்ச்சி நாளை(9ம் தேதி) மாலை 07.30 மணிக்கு அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது என்று அச்சங்கத்தின் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு அய்மான் சங்க தலைவர் அல்ஹாஜ் ஏ. ஷாஹுல் ஹமீத் தலைமை வகிக்கிறார். துபாய் ஈமான் அமைப்பின் மீலாத் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்துள்ள சென்னைப் பல்கலைக்கழக அரபி மொழித்துறை பேராசிரியர் முனைவர் அன்வர் பாதுஷா உலவி எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி. அவர்கள், 'உணர்வாய் உன்னை' நிகழ்ச்சி நடத்தும் தஞ்சை ஜலாலுத்தீன், காயல் மவ்லவி ஹாபிழ் எஸ்.எம்.பி. ஹுசைன் மக்கி மஹ்ளரி ஆகியோர் பெருமானாரின் ஒப்பற்ற பெருவாழ்வைப் பற்றி பேருரை நிகழ்த்த இருக்கின்றனர்.
உலகின் போக்கையே மாற்றி அமைத்த பெருமகனாரின் பெருவாழ்வைப் பற்றி மூன்று அறிஞர்கள் உரையாற்ற இருக்கின்றனர். சிந்தைக்கும் ஈமானுக்கும் விருந்து படைக்கும் பேருரைகளை கேட்டிட தங்களது குடும்பத்துடன் அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.