பிப். 3ல் துபாயில் சென்னை கிரஸென்ட் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
துபாய்: துபாயில் சென்னை கிரஸென்ட் உறைவிடப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி காலை 9.30 மணிக்கு ஈடிஏ ஸ்டார் ஹவுஸ் ஆடிட்டோரியத்தில் நடைபெற இருக்கிறது.
'ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்’ எனும் பள்ளியின் பிரார்த்தனைப் பாடலுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. அல்ஹாஜ். அஹ்மது நாஸிர் தைக்கா சுஐப் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
சென்னை கிரஸென்ட் உறைவிடப் பள்ளியின் அமீரக முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் அல்ஹாஜ் ஆரிஃப் புஹாரி ரஹ்மான் அறிமுகவுரை நிகழ்த்துகிறார். மேலும் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் சையத் எம் ஸலாஹுத்தீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்.
இணையம் வழி இணைவோம் எனும் தலைப்பில் சென்னை கிரஸென்ட் உறைவிடப் பள்ளியின் அமீரக முன்னாள் மாணவர்கள் சங்க துணைத் தலைவர் எஸ்.எம். புஹாரி வாழ்த்துரை நிகழ்த்துகிறார்.
மேலும் சென்னை சீதக்காதி அறக்கட்டளை பொது மேலாளர் அல்ஹாஜ் வி.என்.ஏ. ஜலால், இயக்குநர் டாக்டர் தாவுத் ஷா, பள்ளி முதல்வர் ஆப்ரஹாம் ஜான், சீனியர் முதல்வர் எஸ். யூசுஃப், முன்னாள் மாணவர்கள் சங்க இணை செயலாளர் அபுபக்கர் உள்ளிட்டோர் உரை நிகழ்த்துகின்றனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் தகவல்கள் அறிய துபாயில் அபுபக்கர் 050-4535985, முஹம்மது அர்ஷத் 056-6847129, அபுதாபியில் அமீன் மொஹ்சின் 050-6169695 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
மின்னஞ்சல் : [email protected]
இணையத்தளம் : http://crescentschool.net












Click it and Unblock the Notifications