நாளை துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் ஜூன் மாத இலக்கிய கூட்டம்
துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் ஜுன் மாத இலக்கிய கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை கராமா சிவ்ஸ்டார் உணவகத்தில் நடைப்ற உள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் ஆலோசகர் காவிரிமைந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வெள்ளிக்கிழமையன்று காலை 9.30மணிக்கு ஜூன் மாத இலக்கியக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் தமிழ்த்தேர் வெளியீட்டுச் சிறப்பு இதழ்களாக கணவன் மற்றும் நன்றி ஆகியவை வெளியிடப்படவிருக்கின்றன
மேலும் கணவன் மற்றும் நன்றி ஆகிய இரண்டு தலைப்புகளில் மேட்டுப்பாளையம் ந. சந்திரசேகர் தலைமையில் கவியரங்கம் நடக்கிறது.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க தலைவி மீனாகுமாரி பத்மநாதன், சிறுகதை எழுத்தாளர் கடையநல்லூர் ஷேக் சிந்தா மதார் மற்றும் நாவலர் கெளஸ் முஹையதீன் ஆகியோர் கலந்துகொண்டு இலக்கியச் சிறப்புரை வழங்க இருக்கின்றனர்.
இந்நிகழ்வில் கவிதை எழுத விருப்பம் உள்ளவர்கள், படைப்பாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொள்ளலாம்
055 5993120 / 050 4226752 மற்றும் 050 4184245 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.