பிரான்ஸ் கம்பன் கழகத்தில் புத்தாண்டு, பொங்கல், மு.வ.நூற்றாண்டு விழா
பிரான்ஸ் நாட்டில் உள்ள கம்பன் கழகம் சார்பில் தமிழர்களை ஒருங்கிணைக்கும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு தமிழர் புத்தாண்டு, பொங்கல் விழாக்களும், முனைவர். மு.வரதராஜன் அவர்களின் நூற்றாண்டு விழாவும் இம்மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது.
மு.வரதராஜனார் நூற்றாண்டு விழாவிற்கு கி. அசோகன் தலைமை ஏற்கிறார். விழா மலர் வெளியிடப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கவிதை பாடுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
பொங்கல் திருநாள்விழாவில் வள்ளுவன் வாக்கு என்ற கவியரங்கம் நடைபெற உள்ளது. இதனையடுத்து பேராசிரியர் லெபோ. பெஞ்சமின் நடுவராக பங்கேற்கும் “ ஊழ் பற்றி திருவள்ளுவர் உரைக்கும் கருத்துக்கள் இக்காலத்தில் ஏற்றுக்கொள்ளத் தக்கனவே, தள்ளத் தக்கனவே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற உள்ளது.
கோலப்போட்டி
விழாவில் மாணவர், மாணவியருக்கு ஓவியப்போட்டியும், மகளிர் பங்கேற்கும், கோலப்போட்டியும் நடைபெற உள்ளது. தமிழர்கள் அனைவரும் பங்கேற்ற வேண்டும் என்று விழாக்குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.