ஏப். 12 முதல் 14 வரை துபாயில் சர்வதேச அமைதி மாநாடு

துபாயில் சர்வதேச அமைதி மாநாடு இன்று(12ம் தேதி) முதல் வரும் 14ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு உலக வர்த்தக மைய அரங்கில் நடைபெற இருக்கிறது.
இந்த மாநாட்டில் சவூதி அரேபியாவின் புனித மக்கா பள்ளி இமாம் ஷேக் அப்துல் ரஹ்மான் அல் சுதேஷ், குவைத்தின் ஷேக் மிஷரி அல் அஃபாஸி, இந்தியாவின் டாக்டர் ஜாஹிர் நாயக், மயான் குட்டி மதார், அஹமது ஹமீத், அமெரிக்காவின் யூசுஃப் எஸ்டேட்ஸ், முஹம்மது சலாஹ், அப்துல் பாரி யஹ்யா, மலேசியாவின் ஹுசைன் யீ, லண்டனின் அப்துல் ரஹீம், சோமாலியாவின் சயீத் ரகீஹ், ஆஸ்திரேலியாவின் தவ்பீஃக் சௌத்ரி, கனடாவின் முஹம்மது அல் ஷரீஃப் உள்ளிட்ட உலக அளவில் பிரசித்தி பெற்ற சொற்பொழிவாளர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவிருக்கின்றனர்.
இம்மாநாட்டில் இனம், மதம், மொழி, நாடு என்ற பேதமின்றி அனைத்து நம்பிக்கையுடையவர்களும் பங்கேற்கலாம்.












Click it and Unblock the Notifications