இன்று துபாயில் வானலை வளர்தமிழின் கவியரங்கம்
துபாய்: துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் இலக்கிய கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு துபாய், கராமாவில் உள்ள சிவ்ஸ்டார் உணவகத்தின் முதல் தளத்தில் நடக்கிறது. அப்போது தமிழ்த்தேர் வெளியீட்டுச் சிறப்பு இதழாக ‘பயணம்’ இதழ் வெளியிடப்படவிருக்கிறது என அமைப்பின் ஆலோசகர் காவிரிமைந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் ‘பயணம்’ என்கிற தலைப்பில் கவியரங்கம் அதிரைக் கவியன்பன் கலாம் அவர்கள் தலைமையில் நடக்கிறது.
தமிழார்வலர் திரு.கெளஸ் முகைதீன் அவர்களும், ஸ்மைல் சுரேஷ் கிருஷ்ணா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.
கவிதை எழுத விருப்பம் உள்ளவர்கள், படைப்பாளிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர் 055 5993120 எனும் அலைபேசி எண்ணிலும் 050 4226752 மற்றும் 050 4184245 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications