அக்டோபரில் துபாயில் பிரவாஸி பாரதிய திவாஸ்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் இந்திய சமூக நல மையக் (Indian Community Welfare Committee) கூட்டம் 19.03.2012 அன்று மாலை இந்திய கன்சுலேட் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தலைமை வகித்தார். இந்திய சமூக நல மைய அமைப்பின் கன்வீனர் கே. குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் இந்திய சமூக நல மையத்துடன் இணைவு பெற்ற அனைத்து இந்திய சங்கங்களும் துபாய் அரசின் பதிவு பெறுவது, துபாயில் அக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரவாஸி பாரதிய திவாஸ் (வெளிநாடு வாழ் இந்தியர் நாள்) நடத்தப்பட இருக்கும் தகவல் உள்ளிட்டவை தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் இந்திய கன்சுலேட் உயர் அதிகாரிகள் கே.எம்.சி.சி., ஈமான், துபாய் தமிழ்ச் சங்கம், துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications