இந்தோனேசியாவில் விநாயகருக்கு 108 தேங்காய் உடைத்து தமிழர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்
ஜகர்த்தா: இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள சிவ் மந்திரில் அங்குள்ள தமிழர்கள் புத்தாண்டை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்தோனேசியா வாழ் தமிழர்கள் புத்தாண்டை ஜகர்த்தாவில் உள்ள சிவ் மந்திரில் வெகு விமரிசையாக கொண்டாடினர். புத்தாண்டையொட்டி சிவன், ஐய்யப்பன் ஆகியோருக்கு எண்ணெய், நெய், பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 11 வகைப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் சிவன், ஐயப்பன் மற்றும் பாலாஜிக்கு சிறப்பு அலங்கராம் செய்யப்பட்டு அர்ச்சனை நடந்தது.
அதில் பாலாஜிக்கு சஹரஸ்னாம அர்ச்சனை செய்யப்பட்டது. விநாயகருக்கு தமிழர்கள் சிறப்பு பூஜை செய்தனர். அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்தனர். மக்களின் நலனுக்காக விநாயகப் பெருமானு்ககு 108 தேங்காய் உடைக்கப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications