ஜித்தாவில் 'ஈத் மிலன்': தமிழக ஹஜ் யாத்ரீகர்கள் கவுரவிப்பு
ஜித்தா: இந்த வருடம் புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்றிய தமிழக யாத்ரீகர்களை கவுரவப்படுத்தும் நிகழச்சியான ஈத் மிலன் ஜித்தாவில் நடைபெற்றது.
புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்றிய தமிழக யாத்ரீகர்களை கவுரவப்படுத்தும் வகையில் ஈத் மிலன் என்ற நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஜித்தாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி ஜித்தா, ஷரபியாவிலுள்ள லக்கி தர்பார் ரெஸ்டாரண்டில் நேற்று நடந்தது. இதில் தமிழகத்திலிருந்து வந்திருந்த ஏராளமான ஹஜ் யாத்ரீகர்களும், ஜித்தா வாழ் தமிழ் மக்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக 'ராபியா டீ' அப்துல் அஜீஸ் துவக்கி வைக்க, நிகழ்ச்சி கிராத்துடன் துவங்கப்பட்டது. வந்திருந்தவர்களை வரவேற்று 'உஜாலா' ராபியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தேரழந்தூர் ஹாஜா மைதீன், ஹஜ்ஜின் பயன்களைப் பற்றி கூறியதோடு, ஹஜ்ஜுக்குப் பின் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல செயல்களை பட்டியலிட்டார். தொடர்ந்து ஹஜ் யாத்ரீகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்பொழுது ஹஜ் செய்யும்போது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஹாஜிகள் பகிர்ந்து கொண்டனர். இதுபோல் நடக்கும் சந்திப்பில், பல வருடங்களாக சந்தித்திராத நண்பர்களை சந்தித்ததாக பெருமிதம் கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் எஸ்.எஸ். ஹைதர் அலி மிஸ்பாஹி மார்க்க சொற்பொழிவாற்றினார்.
நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருக்கையில் வயது முதிர்ந்த ஹாஜி ஒருவர் தனது உறவினர்களை பிரிந்து தனியே தவித்துக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை ஈத் மிலனுக்கு அழைத்து வந்து வினவியதில், தனது பெயர் முஹம்மது சுல்தான் என்றும், ஊர் பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு என்றும், இந்திய ஹஜ் கமிட்டியில் வந்த தான் மக்காவிலிருந்து ஜித்தாவிற்கு டாக்ஸியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வந்ததாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து வந்திருந்த மற்ற ஹாஜிகள் அவரை பத்திரமாக மீண்டும் மக்காவிற்கு அழைத்துச் செல்ல ஒப்புக் கொண்டனர். அதே போல் அஹ்மது ரசாத், லப்பைக்குடிக்காட்டைச் சேர்ந்தவர்களை உடனே ஈத் மிலனுக்கு அழைத்து வந்து முஹம்மது சுல்தான் ஜித்தாவில் இருப்பதை மக்காவில் உள்ள அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 'உஜாலா' ராபியா, 'ராபியா டீ' அப்துல் அஜீஸ் மற்றும் நூருல் அமீன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் 'ராபியா டீ' அப்துல் அஜீஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications