ஜித்தாவில் 'ஈத் மிலன்': தமிழக ஹஜ் யாத்ரீகர்கள் கவுரவிப்பு
ஜித்தா: இந்த வருடம் புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்றிய தமிழக யாத்ரீகர்களை கவுரவப்படுத்தும் நிகழச்சியான ஈத் மிலன் ஜித்தாவில் நடைபெற்றது.
புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்றிய தமிழக யாத்ரீகர்களை கவுரவப்படுத்தும் வகையில் ஈத் மிலன் என்ற நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஜித்தாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி ஜித்தா, ஷரபியாவிலுள்ள லக்கி தர்பார் ரெஸ்டாரண்டில் நேற்று நடந்தது. இதில் தமிழகத்திலிருந்து வந்திருந்த ஏராளமான ஹஜ் யாத்ரீகர்களும், ஜித்தா வாழ் தமிழ் மக்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக 'ராபியா டீ' அப்துல் அஜீஸ் துவக்கி வைக்க, நிகழ்ச்சி கிராத்துடன் துவங்கப்பட்டது. வந்திருந்தவர்களை வரவேற்று 'உஜாலா' ராபியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தேரழந்தூர் ஹாஜா மைதீன், ஹஜ்ஜின் பயன்களைப் பற்றி கூறியதோடு, ஹஜ்ஜுக்குப் பின் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல செயல்களை பட்டியலிட்டார். தொடர்ந்து ஹஜ் யாத்ரீகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்பொழுது ஹஜ் செய்யும்போது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஹாஜிகள் பகிர்ந்து கொண்டனர். இதுபோல் நடக்கும் சந்திப்பில், பல வருடங்களாக சந்தித்திராத நண்பர்களை சந்தித்ததாக பெருமிதம் கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் எஸ்.எஸ். ஹைதர் அலி மிஸ்பாஹி மார்க்க சொற்பொழிவாற்றினார்.
நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருக்கையில் வயது முதிர்ந்த ஹாஜி ஒருவர் தனது உறவினர்களை பிரிந்து தனியே தவித்துக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை ஈத் மிலனுக்கு அழைத்து வந்து வினவியதில், தனது பெயர் முஹம்மது சுல்தான் என்றும், ஊர் பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு என்றும், இந்திய ஹஜ் கமிட்டியில் வந்த தான் மக்காவிலிருந்து ஜித்தாவிற்கு டாக்ஸியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வந்ததாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து வந்திருந்த மற்ற ஹாஜிகள் அவரை பத்திரமாக மீண்டும் மக்காவிற்கு அழைத்துச் செல்ல ஒப்புக் கொண்டனர். அதே போல் அஹ்மது ரசாத், லப்பைக்குடிக்காட்டைச் சேர்ந்தவர்களை உடனே ஈத் மிலனுக்கு அழைத்து வந்து முஹம்மது சுல்தான் ஜித்தாவில் இருப்பதை மக்காவில் உள்ள அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 'உஜாலா' ராபியா, 'ராபியா டீ' அப்துல் அஜீஸ் மற்றும் நூருல் அமீன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் 'ராபியா டீ' அப்துல் அஜீஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications