பழனி கோவிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தைப்பூசத் தேரோட்டம்
பழனி: தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணமும், வெள்ளி்த் தேரோட்டமும் நடைபெறுகின்றன. நாளை தைப்பூசத் தேரோட்டம் நடைபெறும்.
தமிழகத்தில் புகழ்பெற்ற முருகன் கோவில்களில் முதன்மையானதும், முருகப் பெருமானின் மூன்றாம் படைவீடாக விளங்குவது பழனி முருகன் கோவில் ஆகும். அங்கு தைப்பூசத் திருவிழா பழனி முருகன் கோவிலின் உப கோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.
இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் திருவிழாவின் 6வது நாளான இன்று இரவு 7 மணிக்கு பெரியநாயகி கோவிலில் அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இரவு 8.30 மணி அளவில் வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது.
திருவிழாவின் 7வது நாளான நாளை மாலை 4.30 மணிக்கு மேல் தைப்பூசத் தேரோட்டம் நடக்கிறது. வரும் 10ம் தேதி தெப்பத் தேர் உலாவும், அன்றிரவு கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவடையும்.
இந்த திருவிழாவையொட்டி தினமும் மாலை கோவில் வளாகத்தில் ஆன்மிகச் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் சொல்லரங்கம் ஆகியவை நடைபெறுகின்றன.












Click it and Unblock the Notifications