23ல் அமீரக தமிழ்ச் சங்கத்தின் 'மகளிர் மட்டும்'!
துபாய்: அமீரக தமிழ்ச் சங்கம் நடத்தும் மகளிர் மட்டும் நிகழ்ச்சி வரும் 23ம் தேதி துபாய் உள்ளரங்கில் நடைபெறுகிறது.
பிற்பகல் 2 மணி்க்கு துவங்கும் நிகழ்ச்சி இரவு 7 மணி வரை நடக்கிறது. பெண்களுக்காக காய்கறிகள், பழங்களைக் கொண்டு உருவங்கள் செதுக்குதல், கைப்பந்து உள்பட பல போட்டிகள் நடத்தப்படுகின்றது. கைப்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் பெண்கள் சுடிதார், பேண்ட் அல்லது ஸ்போர்ட்ஸ் ஆடைகளில் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆண்கள் மற்றும் குழந்களுக்காக ஓவியம் வரையும் போட்டி நடத்தப்படுகிறது. இதற்குத் தேவையான வண்ணங்களை போட்டியாளர்கள் தான் கொண்டு வர வேண்டும். வாட்டர் கலர்ஸ் பயன்படுத்தக் கூடாது. இது தவிர மேஜிக் ஷோவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கைப்பந்து விளையாட்டு பற்றி நன்கு அறிந்தவர்கள் நடுவராக செயல்பட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் சங்க நிர்வாகிகளை உடனே தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications