ரியாத்தில் இருந்து இந்தியா வரும் வழியில் துபாய்க்கு சென்ற வேலூர் எம்.பி.
துபாய்: துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவையில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மானுக்கு 22.02.2013 அன்று காலை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சவூதி அரேபியா தலைநகர் ரியாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு தாயகம் செல்லும் வழியில் துபாய் வந்திருந்தார் அப்துல் ரஹ்மான் எம்.பி. அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தலைமையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, பொருளாளர் ஹலீதுர் ரஹ்மான், துபாய் மண்டலச் செயலாளர் முதுவை ஹிதாயத், காயல் யஹ்யா முஹ்யித்தீன், துங்கு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சர்வதேச காயிதே மில்லத் பேரவை ஒருங்கிணைப்பாளரும், பிறைமேடை இதழின் ஆசிரியருமான எம். அப்துல் ரஹ்மான் எம்.பி பிறைமேடை இதழின் வளர்ச்சி உள்பட பல்வேறு சமுதாய விஷயங்கள் குறித்து விவாதித்தார். அதனைத் தொடர்ந்து அவர் தாயகம் புறப்பட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications