துபாயில் நடந்த ப‌ர‌த‌ நாட்டிய அரங்கேற்றம்

Subscribe to Oneindia Tamil

Bharatanatyam arangetram in Dubai
துபாய்: துபாயில் செல்வி. மெய்யம்மை வள்ளியப்பன், செல்வி. சுருதிலாயா இராம்குமார் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் மில்லியன் பள்ளியில் 28.12.2012 அன்று மாலை 6.30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வரவேற்புரையை செல்வி கண்ணாத்தாளும், செல்வி சஞ்சனா கோபாலும் வழங்கி, ஆசிரியர் கவிதா பிரசன்னாவின் நடன நிகழ்வுகளையும், அரங்கேற்றம் செய்த கண்மணிகளின் நடன பயிற்சியையும், பல்வேறு மேடைகளில் நடனமாடியதையும், பரிசு பெற்றதையும் எடுத்துரைத்தார்கள்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக துபாய் தமிழ்ச் சங்கத்தின் தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ், ஐஎன்கே(INK) கூட்டமைப்பில் இருந்து நாகப்பனும், தாயகத்தில் இருந்து தமது உறவினர்களும், நண்பர்களும் வருகை தந்து சிறப்பித்திருந்தனர். நண்பர் தமிழரசு நடன கண்மணிகளை வாழ்த்தி சிறப்பு செய்தார். நிகழ்ச்சியை காண வருகை தந்த அனைவரையும் வரவேற்று சிற்றுண்டி தந்து வள்ளியப்பன், இராம்குமாரும் நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தார்கள்.

அரங்கேற்றம் செய்த இருவரின் கலைத்திறமை மென்மேலும் வளர அனைவ‌ரும் வாழ்த்தின‌ர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+