தமிழ் செம்மொழி 3நாள் கருத்தரங்கம்: டெல்லியில் இன்று தொடக்கம்
டெல்லி: ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக இந்திய மொழிப் பள்ளி சார்பில் தமிழ்ச் செம்மொழி இலக்கிய கருத்தரங்கம் இன்று டெல்லியில் தொடங்குகிறது.
இந்த மூன்று நாள் கருத்தரங்கம் குறித்து, அதன் அமைப்பாளரும் இந்திய மொழிப் பள்ளி பேராசிரியருமான நா. சந்திரசேகரன் கூறியதாவது:
முதல் நாள் கருத்தரங்கை இந்திய மொழிப் பள்ளியின் "டீன்' அஸ்லம் இஸ்லாஹி தொடங்கிவைத்து தலைமை உரையாற்றுகிறார்.
தேசிய புத்தக அறக்கட்டளை இயக்குநர் சிக்கந்தர், பேராசிரியர் பி. நாச்சிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
கருத்தரங்கில் 40-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்று தமிழ்ச் செம்மொழி இலக்கியங்கள் குறித்து விவாதிப்பர்.
நிறைவாக, பணியில் இருந்து ஓய்வு பெறும் பேராசிரியர் பி. நாச்சிமுத்துவை சிறப்பிக்கும் வகையில் தில்லித் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலர் இரா. முகுந்தன், முத்தமிழ்ப் பேரவைத் தலைவர் கே.வி.கே. பெருமாள், குர்கான் தமிழ் சங்கத் தலைவர் சக்தி பெருமாள், புலவர் விஸ்வநாதன், எழுத்தாளர் ஷாஜகான் உள்ளிட்டோர் அவரை கௌரவிப்பர்' என்று சந்திரசேகரன் கூறினார்.












Click it and Unblock the Notifications