துபாயில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் மற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று ஈகைத் திருநாள் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
ஈகைத் திருநாளையொட்டி பள்ளிவாசல்களில் காலை 6.10 மணிக்கு சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் அமீரக மக்களும், அமீரகத்தில் பணிபுரிந்து வரும் பல்வேறு நாட்டவரும் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.

பள்ளிவாசல்கள்
ஈகைத் திருநாளையொட்டி பள்ளிவாசலில் தொழும் ஆண்கள்.

தொழுகை
பள்ளிவாசல்கள் மட்டுமல்லாது ஈத்கா மைதானங்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. உலக அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை இடம் பெற்றது.

சிறப்பு தொழுகை
அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ஃபுஜைரா, ராசல் கைமா, அல் அய்ன், ஹத்தா உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

வாழ்த்துக்கள்
தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications