துபாயில் கோடைவிழா: சிறந்த அம்மா- குழந்தை தேர்வு போட்டி
துபாய்: துபாய் கோடைவிழாவினையொட்டி துபாய் அவுட்லெட் மாலில் 05.07.2013 வெள்ளிக்கிழமை மாலை சிறந்த அம்மா மற்றும் குழந்தையினை தேர்வு செய்யும் போட்டி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளின் பெற்றோரது பொது அறிவுத்திறனை சோதிக்கும் வண்ணம் பல்வேறு போட்டிகள் இடம் பெற்றன.
பெற்றோர்களுடன் குழந்தைகளும் பங்கேற்று தங்களின் திறமையை விழாவில் உற்சாகமாக வெளிப்படுத்தினர்.
பொழுதுபோக்கு போட்டிகள்
குட்டிக்குழந்தைகளின் பட்டுக் கைவண்ணத்தில் ஹென்னா, பெயிண்டிங், பலூன் பெண்டிங் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நடைபெற்றன.
மேஜிக் ஷோ
மேஜிக் நிகழ்ச்சியினை குழந்தைகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
முகத்தில் பெயிண்டிங்
கோடைவிழாவில் பங்கேற்க வந்த குழந்தைகளுக்கு முகத்தில் வண்ணமயமான பெயிண்டிங்குகள் செய்யப்பட்டன.
ஆட்டம் பாட்டம்
பெரியவர்களுடன், குழந்தைகளும் ஆட்டம் பாட்டம் என அசத்தினர்.
முதல்பரிசு பெற்றவர்கள்
இந்த நிகழ்ச்சியில் அம்மாக்களுக்கான போட்டியில் தமிழ்நாட்டின் நெய்வேலியைச் சேர்ந்த சுபத்ரா ஜவஹர் முதல் பரிசு வென்றார் சிறந்த குழந்தைகளுக்கான போட்டியில் பிரசந்திப் ஜவஹர் முதல்பரிசை வென்றனர். சுபத்ராவின் கணவர் ஜவஹர் துபாயில் உள்ள சிமெக்ஸ் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.