கவிப்பேரரசர் வைரமுத்துவுடன் துபாய் தமிழ் அமைப்பினர் சந்திப்பு
துபாய்: துபாய் வந்திருந்த கவிப்பேரரசர் வைரமுத்துவை அமீரகத்தைச் சேர்ந்த அனைத்து தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் சந்தித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
சந்திப்பின் போது, அனைத்து சங்கங்களின் செயல்பாடுகளையும் கேட்டறிந்த வைரமுத்து அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒரு பேரவையை உருவாக்க வலியுறுத்தினார். மத்திய மற்றும் மாநில அரசாங்கத்திற்கு தனித்தனி அமைப்பின் மூலம் வைக்கப்படும் கோரிக்கைகளை விட ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்த பேரவை மூலம் கோரப்படும் கோரிக்கைகளின் வலிமையை விளக்கினார்.

பொதுவாழ்வில் விருப்பு வெறுப்பின்றி செயல்பட வேண்டும் என்றவர், எந்த ஒரு மனிதனின் சாதனைகளும் கடைசியில் ஒரு சில வரிகளாக வரலாற்றில் சுருங்கிவிடுமென்றும், அது தான் ஒரு மனிதனின் அதிகபட்ச சாதனை என்றும் கூறி, அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயல்பட வலியுறுத்தினார்.

சந்திப்பில் ஈமான் குத்தாலம் லியாகத் அலி, துபாய் தமிழ்ச் சங்கம் தாஹா, அமீரக தமிழர் அமைப்பு அமுதரசன், சிம்மபாரதி, காயிதே மில்லத் பேரவை ஹமீது ரஹ்மான், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகம் கீழைராஸா, அமீரக தமிழ் மன்றம் ஜெஸிலா ரியாஸ், உலக நகைச்சுவையாளர்கள் சங்கம் முகைதீன் பிச்சை மற்றும் செய்தியாளர் முதுவை ஹிதாயத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சந்திப்பின் போது கவிப்பேரரசருடன் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த அரிகேசவ நல்லூர் எஸ்.எஸ். மீரான் உடன் இருந்தார்.

முன்னதாக கவிப்பேரசரை சந்தித்த கவிஞர் அத்தாவுல்லா தான் எழுதிய நீலநதிப்பூக்கள் மற்றும் முகம்மது நபி (ஸல்) வாழ்க்கை வரலாறு கவிதை நூல்களை அவருக்கு வழங்கினார். அத்தாவுல்லாவின் எழுத்து திறனை வைரமுத்து பாராட்டினார்.












Click it and Unblock the Notifications