துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி
துபாய்: கடந்த 26ம் தேதி துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் சார்பில் வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி துபாய் ரிக்கா மெட்ரோ நிலையம் அருகில் உள்ள புளோரா கிராண்ட் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமீரகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் 250க்கும் அதிகமான தோப்புத்துறை சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர்களும் கலந்து கொண்டு புனித ரமலானின் வாழ்த்துக்களையும், மகிழ்வையும் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர்
எம். அப்துல் ரஷீத் அவர்கள் திருமறை வசனங்களை மொழிந்து நிகழ்ச்சியை துவைக்கி வைத்தார். சங்கத்தின் இணைச் செயலாளர் எம். ஜே. அவுலியா முகம்மது நிகழ்ச்சியினை முன்மொழிந்திட, செயலாளர் ஜே.பி. ஜமால் மெய்தீன் வரவேற்புரை நல்கி தொகுத்து வழங்கினார். சங்கத்தின் தலைவர் எம்.எம். ஷர்புதீன் முன்னுரை வழங்கி தலைமையேற்று நிகழ்ச்சியை நடத்தித் தந்தார்.
சிறப்பு விருந்தினராக அமீரகத் தொழில் அதிபரும், ஈமான் அமைப்பின் கல்விக்குழு தலைவருமான பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டார். அவருக்கு நினைவுப் பரிசையும், பொன்னாடையையும் அன்னை பாத்திமா பெண்கள் அரபிக் கல்லூரியின் நிர்வாகிகள் சி. பஷீர் அகமது மற்றும் ஏ.எம்.ஒய். சகாபுதீன் ஆகியோர் வழங்கினர்.
அமீரக இஸ்லாமிய அழைப்பாளர் முஹம்மது அபூதர் அவர்கள் தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார், அவருக்கு நினைவுப் பரிசையும், பொன்னாடையையும் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் எம்.ஏ. சித்திக் மற்றும் கே.எம்.எஸ். பாரூக் ஆகியோர் வழங்கினர். சங்கத்தின் துணைத் தலைவர் ஹெச். பசுல் ஹக் நன்றி கூற இஃப்தார் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.