அபுதாபியில் சர்வதேச புத்தகக் கண்காட்சி: நாளை கடைசி நாள்
அபுதாபி: அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் 23வது சர்வதேச புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது.
அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் 23வது சர்வதேச புத்தகக் கண்காட்சி 24.04.2013 அன்று காலை துவக்கி வைக்கப்பட்டது. இக்கண்காட்சி அபுதாபி சுற்றுலா மற்றும் கலாச்சார நிர்வாகத்தின் சேர்மன் ஷேக் சுல்தான் பின் தஹ்னுன் அல் நஹ்யான் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
நாளை(29ம் தேதி) வரை இக்கண்காட்சி நடைபெறும். பல்வேறு துறை சார்ந்த நூல்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு 900 புத்தக விற்பனையாளர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு 1025 புத்தக விற்பனையாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இக்கண்காட்சியில் 10வது ஆண்டாக பங்கேற்கும் தமிழகத்தைச் சேர்ந்தவரால் நடத்தப்படும் அல் முத்தனபி புத்தக நிறுவனம் கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு விற்பனை சற்று அதிகரிக்கும் என இதனைக் காண ஆர்வமுடன் வரும் மக்கள் மூலம் அறிய முடிவதாக தெரிவித்துள்ளார் அதன் மேலாளர் நூருல் ஹக்.
இந்திய அரசின் தேசிய புத்தக நிறுவனம் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் இயக்குநரும் தமிழகத்தைச், சேர்ந்தவருமான சிக்கந்தர் கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இணையதளம் : www.adbookfair.com
ஃபேஸ்புக் : ADBookFair
ட்விட்டர் : ADIBF
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications