மனஅழுத்தம் போக்கும் பாம்பு மசாஜ்…
மசாஜ் செய்வதன் மூலம் உடலும் மனமும் புத்துணர்ச்சியடையும், மனஅழுத்தம் நீங்கி தெளிவு பிறக்கும் என்பார்கள். ஸ்பா போன்ற இடங்களில் மசாஜ் செய்வதற்கென்றே தனி ஆட்கள் இருக்கின்றனர்.
6 மாதத்திற்கு ஒருநாள் அல்லது வசதியைப் பொருத்து மாதம் ஒருநாள் மசாஜ் செய்து கொள்ளலாம். இதனால் உடல் சுறுசுறுப்பாகும்.
மசாஜ் பலவிதங்களில் செய்யப்பட்டாலும், ஆயில் மசாஜ், மில்க் மசாஜ், நத்தை மசாஜ் என பிரசித்தி பெற்ற மசாஜ்கள் வரவேற்பு பெற்றவை. தற்போது பாம்பு மசாஜ் என்ற புதுவித மசாஜ் இஸ்ரேல் அழகு நிலையங்களில் செய்யப்படுகிறது.

அமேசான் பாம்புகள்
இஸ்ரேலில் வழங்கப்படும் மசாஜ், வேறு எங்குமே கேள்விப்பட்டிராதது. அமேசான் காடுகளில் பிடிக்கப்பட்டு, பழக்கப்படுத்தப்பட்ட பாம்புகளைக் கொண்டு அங்கு மசாஜ் செய்கிறார்கள்.

புல்லரிக்கும் மசாஜ்
பாம்புகளை மனிதனின் முதுகுப்பகுதி, தலைப்பகுதி, கழுத்துப்பகுதி, கால் போன்றவற்றில் ஊறவிட்டு, ஒருவிதமான புல்லரிக்கும் மசாஜ் இங்கே அளிக்கப்படுகிறது.

மன அழுத்தம் குறைகிறது...
இந்த பாம்பு மசாஜால் மன அழுத்தம் வெகுவாகக் குறைவதாக இச்சேவையைப் பெற்றவர்கள் சிலிர்ப்போடு தெரிவிக்கிறார்கள். பாம்பு ஊர்ந்து செல்லும் இடமெங்கும் ரத்த ஓட்டம் அதிகரித்து உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி தருகிறதாம்.

கட்டணம் அதிகமில்லை
இந்த மசாஜ் சேவைக்கு 80 டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதே நம் ஊராக இருந்தால் பாம்பை பார்த்து ஓடியிருக்க மாட்டார்களா என்ன?












Click it and Unblock the Notifications