Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துபையில் ரோட்டரி பயிற்சி நிறைவு விழா- ஈடிஏ அக்பர் கானுக்கு பாராட்டு

Subscribe to Oneindia Tamil

துபை: ரோட்டரி இண்டர்னேஷனல் மாவட்டம் 3212ன் சார்பாக துபைக்கு வருகை தந்திருந்த பிரதிநிதிகளின் பயிற்சி நிறைவு நாள் மற்றும் வழியனுப்பு நிகழ்வு துபை கிரீக் படகில் ஏப்ரல் 7 அன்று மாலை 8 மணியளவில் நடைபெற்றது.

நிகழ்வில் ரோட்டரி அமைப்பின் சார்பாக முன்னாள் கவர்னர் ஆறுமுகப் பாண்டியன் மற்றும் ரோட்டரி நடப்பு செயலாளர் பி.கே. சரவணன் ஆகியோர் ஈடியே குழுமத்தின் மனிதவள மேம்பாட்டு செயல் இயக்குநர், அக்பர்கான் அவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.

Rotary international function in Dubai
தொடர்ந்து பேசிய ஆறுமுகப் பாண்டியன், ஈடியே மொத்த குழுமத்திற்கும் மனிதவள மேம்பாட்டு செயல் இயக்குநராக பணியாற்றும் அக்பர்கான் அவர்களின் சேவையை பாராட்டினார்.

அவரின் எளிமையை மேற்கோள் காட்டி பேசியவர், ஈடியேவின் சார்பாக, தென்மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை மற்றும் இராமநாதபுர மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டுவரும் நடமாடும் மருத்துவமனை திட்டத்தில் அக்பர்கானின் பணியை பாராட்டி பேசினார். மேலும் துபைக்கு வருகை தந்த தங்களை சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வை ஊட்டும் வண்ணம் தங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த நெல்லை எஸ்.எஸ்.. மீரானுக்கு நன்றியினை பதிவு செய்தார்.

பின்பு பேசிய அக்பர்கான் தன் உரையில், எல்லோரும் குறிப்பிடுவது போல ஈடியே நிறுவனம் , 70,000 குடும்பங்களுக்கு மட்டும் வாழ்வாதாரம் வழங்கவில்லை. இதுவரை சுமார் 2,50,000 குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கியிருக்கிறது என்ற புள்ளி விபரத்தை பதிவு செய்தார். மனிதவள மேன்பாட்டுத்துறையில் தன் அனுவங்களை பகிர்ந்து கொண்ட அவர், கடந்த 40 வருடங்களாக ஈடியே கடந்து வந்த பாதைகளையும், எதிர் கொண்ட சவால்களையும் நினைவு கூர்ந்தார்.

இந்நிகழ்வில் ஈடியே நிர்வாக இயக்குநர் அலுவலக மேலாளர் மீரானுக்கு ரோட்டரி முன்னாள் கவர்னர் ஆறுமுகப் பாண்டியன் பொன்னாடை போர்த்த, ரோட்டரி முன்னாள் கவர்னர் முகவை தினேஷ் பாபு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.

பின்பு பேசிய நெல்லை மீரான், ரோட்டரி அமைப்பிற்காக தான் செய்த மிகச் சிறிய உதவிகளை கூட பெரிதுபடுத்தி பேசும் அவர்களின் பெருந்தன்மையை வியந்ததுடன், வரும் காலங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த அமைப்பிற்கு தன் உதவி தொடரும் என்றும் உறுதியளித்தார்.

நிகழ்வில் அமீரத்தமிழர்கள் அமைப்பின் அமுதரசன், துபை காயிதேமில்லத் பேரவை கீழக்கரை ஹமீதுரஹ்மான், மற்றும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக கீழைராஸா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரோட்டரி இண்டர்நேஷனல் நிர்வாகிகளுடன் இணைந்து மீரான், மற்றும் அம்பை ஸ்பர்ஜன் சுகுமார் ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+