துபையில் ரோட்டரி பயிற்சி நிறைவு விழா- ஈடிஏ அக்பர் கானுக்கு பாராட்டு
துபை: ரோட்டரி இண்டர்னேஷனல் மாவட்டம் 3212ன் சார்பாக துபைக்கு வருகை தந்திருந்த பிரதிநிதிகளின் பயிற்சி நிறைவு நாள் மற்றும் வழியனுப்பு நிகழ்வு துபை கிரீக் படகில் ஏப்ரல் 7 அன்று மாலை 8 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்வில் ரோட்டரி அமைப்பின் சார்பாக முன்னாள் கவர்னர் ஆறுமுகப் பாண்டியன் மற்றும் ரோட்டரி நடப்பு செயலாளர் பி.கே. சரவணன் ஆகியோர் ஈடியே குழுமத்தின் மனிதவள மேம்பாட்டு செயல் இயக்குநர், அக்பர்கான் அவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.

அவரின் எளிமையை மேற்கோள் காட்டி பேசியவர், ஈடியேவின் சார்பாக, தென்மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை மற்றும் இராமநாதபுர மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டுவரும் நடமாடும் மருத்துவமனை திட்டத்தில் அக்பர்கானின் பணியை பாராட்டி பேசினார். மேலும் துபைக்கு வருகை தந்த தங்களை சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வை ஊட்டும் வண்ணம் தங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த நெல்லை எஸ்.எஸ்.. மீரானுக்கு நன்றியினை பதிவு செய்தார்.
பின்பு பேசிய அக்பர்கான் தன் உரையில், எல்லோரும் குறிப்பிடுவது போல ஈடியே நிறுவனம் , 70,000 குடும்பங்களுக்கு மட்டும் வாழ்வாதாரம் வழங்கவில்லை. இதுவரை சுமார் 2,50,000 குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கியிருக்கிறது என்ற புள்ளி விபரத்தை பதிவு செய்தார். மனிதவள மேன்பாட்டுத்துறையில் தன் அனுவங்களை பகிர்ந்து கொண்ட அவர், கடந்த 40 வருடங்களாக ஈடியே கடந்து வந்த பாதைகளையும், எதிர் கொண்ட சவால்களையும் நினைவு கூர்ந்தார்.
இந்நிகழ்வில் ஈடியே நிர்வாக இயக்குநர் அலுவலக மேலாளர் மீரானுக்கு ரோட்டரி முன்னாள் கவர்னர் ஆறுமுகப் பாண்டியன் பொன்னாடை போர்த்த, ரோட்டரி முன்னாள் கவர்னர் முகவை தினேஷ் பாபு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.

பின்பு பேசிய நெல்லை மீரான், ரோட்டரி அமைப்பிற்காக தான் செய்த மிகச் சிறிய உதவிகளை கூட பெரிதுபடுத்தி பேசும் அவர்களின் பெருந்தன்மையை வியந்ததுடன், வரும் காலங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த அமைப்பிற்கு தன் உதவி தொடரும் என்றும் உறுதியளித்தார்.
நிகழ்வில் அமீரத்தமிழர்கள் அமைப்பின் அமுதரசன், துபை காயிதேமில்லத் பேரவை கீழக்கரை ஹமீதுரஹ்மான், மற்றும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக கீழைராஸா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரோட்டரி இண்டர்நேஷனல் நிர்வாகிகளுடன் இணைந்து மீரான், மற்றும் அம்பை ஸ்பர்ஜன் சுகுமார் ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
-
ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததற்காக கார் ஓட்ட மறுத்தாரா டிரைவர்? வைரல் வீடியோவிற்கு விளக்கம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு -
உளவுத்துறையை விட மோசம்.. சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்.. இப்படி வேற நடக்குதா? -
சிதம்பரம் மூலம் ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்.. சிக்கலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி -
திமுக ஆதரவாளர்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற ராகுல் முடிவு? புதிய தலை யார்? -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் கேம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ அப்டேட்.. நோட் பண்ணுங்க -
"எவ்வளவு செலவானாலும் ஓகே.." கோடிகளை கொட்டும் அல்ட்ரா செல்வந்தர்கள்! இதுதான் துபாய் எஸ்கேப் பிளான் -
Lunar Eclipse: ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம்.. கண்டுகளித்த மக்கள்.. என்னவெல்லாம் செய்யக்கூடாது -
Rajya sabha: மாநிலங்களவை தேர்தல்! திமுக வேட்பாளர்கள் யார் யார்? -
வீடு கொடுத்தவனுக்கே ஆபத்து.. ஏமாற்றப்பட்டதா அரபு நாடுகள்? அமெரிக்கா மீது கொதிக்கும் 'ஷேக்குகள்'! -
ஆபரேஷன் 200.. காங்கிரஸ் ‘பிக் பிளானை’ கண்டுபிடித்த ஸ்டாலின்.. முளையிலேயே கிள்ளிய அறிவாலயம்! -
ஓபிஎஸ் வந்து.. 1 வாரம் கூட ஆகலியே.. அதற்குள் அதிரும் அறிவாலய கதவுகள்.. திமுகவில் ஏடாகூட பிரச்சனை!












Click it and Unblock the Notifications