வெளிநாட்டில் வாழ்வதால் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?: குவைத்தில் பட்டிமன்றம்
குவைத்: குவைத் இஸ்லாமியச் சங்கம்(K-Tic) நடத்தும் சிறப்பு பட்டிமன்றம் வரும் மே மாதம் 17ம் தேதி நடைபெறுகிறது.
அறிஞர்களும், பேச்சாளர்களும் மட்டுமே பங்கேற்கும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளுக்கு மாற்றமாக பொதுமக்கள் மட்டுமே பங்கேற்று தங்களின் எண்ணங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வதற்காக குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) வரும் மே மாதம் 17ம் தேதி "சிறப்பு பட்டிமன்றம்" நிகழ்ச்சியை குவைத்தில் முதல் முறையாக நடத்துகிறது.
வெளிநாட்டு வாழ்க்கையில் நாம் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சி இஷா தொழுகையைத் தொடர்ந்து இரவு 9.30 மணி வரை நடைபெறுகிறது.
இடம்: K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல்,
அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசல்,
ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில், ஏர்போர்ட் (55ம் எண்) சாலையும், 6வது சுற்றுச் சாலையும் இணையும் பாலத்திற்கு அருகில்,
ஃகைத்தான், குவைத்.
பட்டிமன்றத்தில் பங்கேற்பதற்கான விதிமுறைகள்:
குவைத் வாழ் தமிழ் முஸ்லிம் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.
வயது வரம்பு கிடையாது.
பெயர் மற்றும் தலைப்பு போன்றவற்றை முன்பதிவு செய்ய வேண்டும்.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19 மற்றும் 26 மற்றும் மே 3 மற்றும் 10) நடைபெறும் பட்டிமன்ற பயிலரங்கில் கலந்து கொள்ள வேண்டும்.
5 முதல் 8 நிமிடங்கள் வரை உரையாற்றலாம்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே பட்டிமன்றத்தில் உரையாற்ற அனுமதி வழங்கப்படும். சிறுமிகளுக்கு விதிவிலக்கு உண்டு.
நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
முன்பதிவு செய்யுமிடம்: K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்.
முன்பதிவு செய்ய கடைசி நாள் : 03.05.2013 வெள்ளிக்கிழமை ஜும்ஆ வரை
குறிப்பு: பெண்களுக்கு தனியிட வசதியும், அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த அரிய வாய்ப்பை குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய சகோதரர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications