12ம் தேதி துபாயில் 'விவேக் 150': சுவாமி விவேகானந்தர் பிறநதநாள் விழா கொண்டாட்டம்

விவேக் 150 எனும் தலைப்பில் சுவாமி விவேகானந்தருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
துபாய் இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். விவேகானந்தரின் சிந்தனையில் மனித நேய ஒருமைப்பாடு எனும் தலைப்பில் உதய்பூர் பசிபிக் பல்கலைக்கழகத்தின் தலைவர் டாக்டர் பகவதி பிரகாஷ் ஷர்மா விழாப் பேருரை நிகழ்த்துகிறார்.
அதனைத் தொடர்ந்து சுவாமி விவேகானந்தருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விவேகானந்த வந்தனம், மோகனா குழு வழங்கும் விவேகானந்தம் எனும் நாட்டிய நாடகம் ஆகியவையும் இடம்பெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க விழாக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 055 220 72 63 எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications