பொங்கல் விழா: ஷார்ஜா சென்ற தமிழ் சின்னத்திரை கலைஞர்களுக்கு வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா: ராசல்கைமா தமிழ் மன்ற பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 24ம் தேதி வியாழக்கிழமை காலை ஷார்ஜா விமான நிலையம் சென்ற சின்னத்திரைக் கலைஞர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராசல்கைமா தமிழ் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க சின்னத்திரை கலைஞர்கள் நகைச்சுவை பேரரசு தேவகோட்டை ராமநாதன், திருச்சி சரவணகுமார், முனைவர் சங்கீதா, பேராசிரியர் பழனி, கலைமாமணி ஆவுடையப்பன், மதுரை மீனாட்சி சுந்தரம் ஆகியோர் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் விமானம் மூலம் கடந்த வியாழக்கிழமை ஷார்ஜா சென்றடைந்தனர்.













Click it and Unblock the Notifications