துபாயில் ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் குறித்த நூல் வெளியீடு
துபாய்: துபாய் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பு, தமிழ்த்தேர் நண்பர்கள் குழுவின் சார்பில் கவியரங்கம் கராமா சிவ ஸ்டார் பவனில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின்
போது ஓமனில் பணிபுரிந்து வரும் சித்ரா நாராயணன் மற்றும் பத்திரிகையாளர் கபீர் யூசுப் ஆகியோர் எழுதிய ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் குறித்த நூல் மற்றும் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தமிழ்த்தேர் இதழ் வெளியிடப்பட்டது.

காவிரிமைந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மலேசியத் தமிழர் நசுருல்லா கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில், தமிழின் முக்கியத்துவம் குறித்து விவரித்தார். மேலும் தாய்மொழி மூலம் அரபி மொழியை எளிதில் கற்றுக்கொள்ளும் வழிமுறையை உலகம் முழுவதும் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.

கவிஞர்கள் தஞ்சாவூரான் மற்றும் குறிஞ்சிநாடன் ஆகியோர் தலைமையில் புரட்சியின் பூபாளம் எனும் தலைப்பில் கவியரங்கமும், பட்டுக்கோட்டையார் பாடல்களின் சிறப்பு கலந்துரையாடலும் நடைபெற்றது. வதூத், நர்கிஸ் ஜியா, ஹிதாயத்துல்லா, காயல் வாகித், ரமாமலர், உமா பாலாஜி, ஜியா உள்ளிட்ட பலர் கவிதை வாசித்தனர்.

சிறப்பு விருந்தினர் நசுருல்லா கான் பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஓமனில் பணிபுரிந்து வரும் சித்ரா நாராயணன் மற்றும் பத்திரிகையாளர் கபீர் யூசுப் ஆகியோர் எழுதிய பெருமைமிகு சுல்தான் காபூஸ் பின் சைத் அல்சைத் என்ற நூல் மற்றும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தமிழ்த்தேர் இதழ் வெளியிடப்பட்டது. இந்த நூலை லட்சுமி நாராயணன் வெளியிட உமா பாலாஜி பெற்றுக் கொண்டார்.

ஜியாவுதீன் நன்றியுரை நிகழ்த்தினார். ரமாமலர் நிகழ்ச்சியை அழகு தமிழில் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிந்தராஜன், சசிகுமார், ஹிதாயத்துல்லா, இப்ராகிம், லட்சுமி நாராயணன், ஸ்வேதா கோபால், ரமணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications