ஷார்ஜாவில் நாட்டிய அரங்கேற்றம்
ஷார்ஜா: ஷார்ஜா இந்தியன் அசோஷியேஷன் வளாகத்தில் நாட்டிய அரங்கேற்றம் நிகழ்ச்சி 28.12.2013 சனிக்கிழமை மாலை வெகு சிறப்புற நடைபெற்றது.
சஞ்சனாவின் நாட்டிய அரங்கேற்றம் நிகழ்ச்சி அதனைத் தொடர்ந்து ஜனனி சுரேஷின் தொடர் அரங்கேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. இருவரது நாட்டியமும் பார்வையாளர்களைக் கவர்ந்தது.

சமூக சேவகி ஜெயந்தி மாலா சுரேஷ் மற்றும் சுஜாதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அவர்களுக்கு பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி அலமேலு கோபால் மற்றும் சீதாலட்சுமி சுரேஷ் கிருஷ்ணன் தம்பதியினர் கௌரவித்தனர்.
ஜெயந்தி மாலா சுரேஷ் தனது உரையில் ஜனனி சுரேஷ் மற்றும் சஞ்சனா ஆகியோரின் நடனம் சிறப்புற அமைந்திருந்தது. தொடர்ந்து பல சாதனைகள் நிகழ்த்த வாழ்த்தினார். சிறப்பு விருந்தினர் சுஜாதாவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
குரு கலைமாமணி கவிதா பிரசன்னா வழிகாட்டுதலில் நாட்டிய நிகழ்வு அமைந்திருந்தது. வசந்த சங்கர் ராமன் வோகலும், சங்கரராமன் மிருதங்கமும், ரவிசங்கர் வயலினும், ராஜேஷ் ராகவன் ஃபுளூட்டும் வாசித்தனர்.
நிகழ்வினை திருமதி சுவாமிநாதன் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் நாட்டிய ஆர்வலர் பலர் குடும்பத்துடன் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications