துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் 'தேசம் மறந்த ஆளுமைகள்' நூல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் தேசம் மறந்த ஆளுமைகள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் சார்பில் ராபியா குமாரன் எழுதிய ‘தேசம் மறந்த ஆளுமைகள்' என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது.

ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி வெளியிட முதல் பிரதியை துணைப் பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா பெற்றுக் கொண்டார். அப்போது பேசிய லியாக்கத் அலி, ராபியா குமாரன் இந்திய விடுதலைக்கு பாடுபட்டு மறக்கப்பட்ட மாவீரர்கள் பற்றிய தகவலை தொகுத்து இளம் தலைமுறைக்கு வழங்கியுள்ளார். அவரின் சேவை பாராட்டுக்குரியது எனக் குறிப்பிட்டார்.
விழாவில் ஈமான் அமைப்பின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications