சித்தர்கள் போற்றும் இயற்கை வயாக்ரா வெந்தையம்!
இன்றைக்கு நாம் சமையலில் பயன்படுத்தும் பொருட்கள் எல்லாமே மருத்துவகுணம் கொண்டவைதான். உடல் சக்தியோடு உணர்வுகளோடும் தொடர்புடைய பொருட்களைத்தான் தினசரி நாம் உண்கின்றோம்.
அந்தவகையில் அன்றாடம் உபயோகிக்கும் வெந்தையம் இரும்பு சக்தி அதிகரிப்பதோடு மனிதர்களின் பாலுணர்வை தூண்டும் பொருளாக உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
"போகக்கு மனந்தளிக்கும் நித்த முறை விந்துவையுண்டாக்கும் மனமே யறி" என தேரயர் சித்தர் அன்றே வெந்தையத்தைப் பற்றி கூறியுள்ளார். தற்போதைய ஆய்வுகளும் இதனை நிரூபித்துள்ளன.

இரும்புச்சத்து
வெந்தையம் என்பதை வெந்த அயம் என்று பிரிக்கின்றனர் சித்தர்கள். அயம் என்பது அயச்சத்தான இரும்புச்சத்து ஆகும். உணவை சொரிக்கச் செய்து சக்தியைப் பெற்று உடலில் சீரான இயக்கத்துக்கு உதவுவது இரும்புச் சத்தாகும். தினசரி வெந்தையம் சாப்பிட மனித உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

நீரிழிவு நோயாளிகள்
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற மிகச்சிறந்த மருந்து வெந்தையம். வெந்தையத்தை இரவு முழுவதும் ஊறவைத்து அந்த தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் உடலில் இன்சுலின் சுரப்பு சரியான அளவில் நடைபெறும்.

வெந்தையம் ஆய்வு
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். அவர்கள் தங்களின் ஆய்விற்காக 25 வயது முதல் 52 வயதுடைய 60 ஆரோக்கியமான மனிதர்களை தேர்ந்தெடுந்து தினசரி இரண்டு வேளை 6 வாரங்களுக்கு வெந்தயம் சாப்பிடக் கொடுத்தனர்.

அதிகரித்த உணர்ச்சி
வெந்தையம் சாப்பிடும் முன்பு இருந்த அவர்களிடம் குறைவாக இருந்த பாலுணர்ச்சி வெந்தையம் சாப்பிட்ட பின்னர் மூன்று முதல் 6 வாரங்களில் அதிகமாக இருந்தது தெரியவந்தது. வெந்தயம் சாப்பிட்டவர்களுக்கு சராசரியாக 16 சதவிகிதம் முதல் 28 சதவிகிதம் வரை பாலுணர்ச்சி அதிகரித்திருந்தது.

செக்ஸ் ஹார்மோன்கள்
மேலும் வெந்தயமானது ஆண்களின் டெஸ்ட்ரோஸ்ட்ரோன் ஹார்மோன்களின் உற்பத்தியும் அதிகரித்திருந்ததாம். எனவே பாலுணர்வு தூண்டப்படுவதில் பிரச்சினை உள்ளவர்கள் கண்ட மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதை விட வெந்தயம் சாப்பிடலாம் என்று ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

விந்து இழப்பு
தினமும் உடல் உறவு கொண்டாலும் அதனால் உண்டான விந்திழப்பை அன்றே சரி செய்து மீண்டும் குறைந்ததை ஈடுசெய்து விடும் வல்லமை வெந்தயத்துக்கு உண்டு. இதை இயற்கை வயாக்ரா என்று மேல் நாட்டு ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

இயற்கை வயக்ரா
"போகக்கு மனந்தளிக்கும் நித்த முறை விந்துவையுண்டாக்கும் மனமே யறி" என தேரயர் சித்தர் அன்றே வெந்தையம் பற்றி கூறியுள்ளார். வெந்தயத்தில் "புரோட்டோ டயசின்" என்ற வேதியல் மூலக்கூறு இருக்கின்றது. இது இயற்கை வயாக்ரா என்று அழைக்கப்படுகின்றது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications