Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"காகிதப் பூக்கள்".. நெடுந்தொடர் (5)

எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் 5வது அத்தியாயம் இது.

Subscribe to Oneindia Tamil
- லதா சரவணன்

"அவனுடைய குடோன் இங்கே குப்பத்துக்குப்பின்னாடி இருக்கு, அங்கேதான் தப்பு எதுவும் செய்வான்.. எடம் எனக்குத் தெரியும்.,. வாங்க ஸார்...!" கோட்டி முன்னால் நடக்க, ஈஸ்வரும், துரையும் அவனைத் தொடர்ந்தார்கள்.

சற்றே ஒதுக்குப்புறமான இடமாய் இருந்தது அந்தக்கட்டிடம். "உள்ளே வா குரல் கொடுத்து கூப்பிடு ! "

"அய்யா,,,,ஏற்கனவே எங்க ரெண்டு பேருக்குள்ளே கோஷ்டிப்பூசல் இனிமே நீங்கதான் பார்த்துக்கணும்....!"

Latha Saravanan's Kakithapookkal

"சரி போ......"!

ஈஸ்வரும் துரையும் கையில் துப்பாக்கியோடு உள்ளே நுழைந்தனர். வேலு, அவர்களைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சுற்றிலும் மூன்றே பேர், ஜீவன் ஒரு கயிறு கட்டிலில் கிடந்தான். மயக்கமாய் கூடவே இன்னொரு சிறுவனும், கையில் ஊசி குத்திய தடம், ஈஸ்வருக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது. எல்லாரையும் நையப் புடைத்தான். "என்ன வேண்டுமானாலும் செய்துகொள் உன்னை உயிரோடு நான் விட்டால்தானே"-

"ஏய்?! ஏ.ஸி என்னையா அடித்துவிட்டாய் ? உனக்கு என்ன தெரியம்? நான் நினைத்தால்.... உன்னை என்ன செய்வேன் தெரியுமா ?" ஒரு மணி நேரத்திற்குள்ளே வெளியே வந்துவிடவா எந்த தடையும், இல்லாமல் ஆளுங்கட்சியே என் பக்கம்.'

"ஒரேயொரு விநாடி மட்டும் யோசித்தான் ஈஸ்வர், பிறகு துரை நாம இங்கே வந்துயிருப்பது? யாருக்கும் தெரியாது இல்லே...." அவன் இல்லை என்று தலையசைக்க, ஒரு விநாடி யோசித்தான். அவனோடு சேர்த்து மொத்தம் நான்கு பேர் கையிலிருந்த பிஸ்டலை உயர்த்தி எல்லாரையும் சுட்டான்.

"ஸார்..." துரை பதற.....!

'விடுங்க.....! துரை இவனை கூட்டிப்போய் வேஸ்ட்டா ஏன் செலவைக் கூட்டணும். இன்னைக்கு விட்டா திரும்பவும் வந்து எத்தனைப் பெற்றவங்க வயிற்றெரிச்சலைக் கொட்டிக்குவான். விடுங்க ஜனத்தொகையில் ஒரு நாலுபேர் காலி இந்தியாவிற்கு என்னால் முடிந்த சின்ன உதவி!"

"விசாரணை வருமே ஸார்....!"

"வரட்டும் பார்த்துக்கலாம் செத்தவன் ஒண்ணும் மகாத்மா இல்லை காசாசை பிடிச்ச பிசாசு தப்பிச்சுப் போகப் பார்த்தான். காலில் சுட முயன்றோம் குறி தவறிட்டுன்னு சொல்லி பைலை க்ளோஸ் பண்ணுங்க. இல்லேன்னா எண்கெளண்டர்ல போட்டதா பேசிடுவோம்." துரையும் தலையசைக்க ஜீவனை நல்ல விதமாய் வீட்டில் கொண்டு போய் சேர்த்தான்.

கணவன் மனைவி இருவரும் காலில் விழாத குறைதான். "நன்றிடா எங்க உயிரையே மீட்டுக்கொடுத்திட்டே,,,,,"

"விடுடா ஜீவன் எனக்கும் மகன் மாதிரிதானே! நான் வரேன், எத்தனையோ ரகசியமா இருந்தும் ப்ரஸுக்கு நியூஸ் போயிடுச்சு. விசாரணைக்கமிஷன் வந்தாலும் வரும் அதை கவனிக்க வேண்டும்."

"என் பொருட்டு நீ செய்த உதவிக்கு இத்தனை பெரிய கஷ்டமா ? என்ன பிரச்சனைவந்தாலும் சரி நானிருக்கேன். எங்கு வந்து சாட்சி சொல்லவும் நான்தயார்."

Latha Saravanan's Kakithapookkal

"முட்டாள் இது உதவி இல்லை அன்பு! அப்பறம் உங்க டிரைவர் அடையார் மருத்துவமனையில் இருக்கிறார். அவரை போய் பாருங்கள். நல்ல விசுவாசமான வேலைக்காரர்கள் கிடைப்பது ரொம்பவும் கஷ்டம்." அவன் கிளம்ப முற்படும்போது, துரை வாசலில் நின்றார்.

"ஸார்... உங்களை கமிஷனர் வரச்சொன்னார்..."

"வருகிறேன் ..." எத்தனை சொல்லியும் கேட்காமல் அவன் கூடவே வித்யாவும், கவினும் கிளம்பினார்கள். கமிஷனர் அலுவலகத்தில் ஒரு விறைப்பான சல்யூட்டை வழங்கி அவர் காட்டிய இருக்கையில் நன்றி சொல்லி அமர்ந்தான் ஈஸ்வர்.

"அந்த வேலுக்கு அரசியல் செல்வாக்கு நிறைய உண்டு. ஈஸ்வர் மேலேயிருந்து ஒரே பிரஷர். கேஸ் எதுவும் இல்லாமல் எப்.ஐ.ஆர் போடாமல் எப்படி அவனை நீங்க எண்கெளண்டர் பண்ணலாம் என்று கேட்டு துளைக்கிறாங்க?"

"ஸார் கடந்த சில வருடங்களாவே சிலகும்பல் பள்ளி குழந்தைகளை கடத்தி மிரட்டி பணம் பறிப்பது நடந்து வருகிறது... பணம் தரலைன்னாலோ அல்லது போலீஸ்க்கு சொன்னாலோ குழந்தையைக் கொல்வதுன்னு வன்முறையில் ஈடுபடறாங்க.... இது என் நண்பன் கவின் இவர் குழந்தையைத்தான் கடத்தினாங்க.... அவன் பிஞ்சுக் கையில் எத்தனை மயக்கமருந்து போடப்பட்ட தடயங்கள் இருக்குத் தெரியுமா ? அதில் இந்த வேலுவும் ஒரு ஆள் என்பது ஒரு ரூமராகவே இருந்தது."

"இன்பார்மர் யாரு ? கடத்தலை நேரில் பார்த்த சாட்சி இருக்கா...?"

"கோட்டி பாஸ்கர் இருவருக்கும் ஏதோ கோஷ்டி பூசல் அவன் எல்லாத்தையும் சொல்லி விட்டான். கடத்தலை இவரோட டிரைவர் நோ¢ல் பார்த்து இருக்கார். அவர் சொன்ன அடையாளங்களை வச்சித்தான் நான் வேலுவை பிடிக்க சென்றேன். போன இடத்திலே எங்களை தாக்கிட வந்தாங்க வேறு வழியில்லாம சுட வேண்டியதாகப் போச்சு....!"

"அரெஸ்ட் பண்ணிக் கொண்டு வந்து இருக்கலாம் ஈஸ்வர்."

"முயற்சி பண்ணினேன் ரொம்பவும் திமிரா பேசினான் , வேறு வழியில்லாமதான் சுட்டேன்."

கவின் வாய் திறந்தான். 'ஸார்.. என் குழந்தையை கடத்திட்டுபோய்... அவனை பார்ப்போமான்னு ஆயிடுச்சு அந்த நேரத்தில் ஈஸ்வர் மட்டும் உதவலேன்னா என் பிள்ளையை நான் பார்த்து இருக்கவே முடியாது... ! நானும் சொசைட்டியில் பெரிய ஆளுதான்... எனக்கு அரசியலில் ஆட்களைத் தெரியும். என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கறேன். ஒரு போலீஸ் அதிகாரியா அவர் தன் கடமையைத்தான் செய்து இருக்கார்."

(தொடரும்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+