துபாயில் மீலாது நபி விழா கொண்டாட்டம்
துபாய்: துபாய் அத்தரீகத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 34ம் ஆண்டு மீலாதுன்னபி பெருவிழா நிகழ்ச்சியை கடந்த 31ம் தேதி மாலை நடத்தியது.
இந்த நிகழ்ச்சி துபாய் லேண்ட்மார்க் விடுதியில், கலீபா நிர்வாகத் தலைவர் ஏ.பி. சகாபுதீன் பி.இ., எம்.பி.ஏ. ஹக்கியுல்காதிரி தலைமையில் மௌலானாமார்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இறை வசனங்களை ஓதி மௌலவி அப்துல் ஹமீது விழாவை துவக்கி வைக்க, அதைத் தொடர்ந்து ஹுவல் வுஜூத் பாடலை மதுக்கூர் முஹம்மது தாவூது பாட அதன் தமிழாக்கத்தை அபுல்பசர் வாசித்தார். நபிப்புகழ் பாடலை மதுக்கூர் ஹாஜா முகைதீன் பாடினார். இணை பொதுச் செயலாளர் கிளியனூர் இஸ்மத் வரவேற்புரை நிகழ்த்த, சையது அலி மௌலானா, முஹிப்புல்உலமா கீழக்கரை முஹம்மது மஃரூப் மற்றும் மௌலவி முஹம்மது அலி பிலாலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இவர்களைத் தொடர்ந்து முஹம்மது ஹனீப் ரஜா காதிரி பீஜாப்பூர் தனது வசீகரமான குரலில் நபிகள் நாயகத்தை புகழ்ந்து பாடிய கஸிதா உருது பாடல்களும், பெங்களூருவைச் சேர்ந்த முஹம்மது நபீல் பாடிய தமிழ் கஸிதா பாடல்களும் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது. சிறப்பு சொற்பொழிவை மௌலவி அல்ஹாபிழ் எஸ்.எம்.எஸ். ஹுசைன் மக்கீ மஹ்லரி நிகழ்த்தினார்.
நான்காம் ஆண்டாக மீலாதுன்னபி ஆன்லைன் கேள்வி பதில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அபுதாபி மௌலிது கமிட்டியில் இருந்து நாகூர் முஸம்மில், ஈமான் அமைப்பில் இருந்து எஸ்.எம். பாரூக், காயிதே மில்லத் பேரவையில் இருந்து ஹமீதுர் ரஹ்மான், ஸுன்னத் ஜமாஅத் பேரவை அப்துல் கஃபூர், காயல்பட்டினம், லால்பேட்டை, நெடுங்குளம் ஜமாஅத்தார்கள், பத்ரு சஹாபாக்கள் இல்லத்து நண்பர்கள், மற்றும் பெரும் திரளில் தமிழர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் நூருல் அமீன், அதிரை அப்துல் ரகுமான், அகமது இம்தாதுல்லா ஆகியோர் ஆன்லைனில் நேரடி ஒளிப்பரப்பு செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மதுக்கூர் ஹாதம் அப்துல் குத்தூஸ், அபுல்பசர், முகம்மது தாவூது, மதார்ஷா, சாகுல் ஹமீது, அதிரை ஷர்புதீன், ஓ.பி.யூ பஷீர், கோட்டைகுப்பம் முகைதீன், அலிஅக்பர், மன்னை அப்துல் மாலிக், பஷிருல்லா, அமீர்அலி, மதுக்கூர் அப்துல் ரகுமான், மன்னை ஷேக்தாவூது, ஹிதாயத்துல்லா, கிளியனூர் இஸ்மத் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிறைவாக மதுக்கூர் அமீர்அலி நன்றி உரை நிகழ்த்தினார் யா நபீ சலாம் அலைக்கும் யா ரசூல் ஸலாம் அலைக்கும் பைத்துடன் இனிதே நிகழ்ச்சி நிறைவடைந்தது.
-
துபாய் தங்கம் ஏன் உலகிலேயே நம்பர்-1? விலையிலும் அதிரடி மாற்றம்! இப்போது வாங்குவது லாபமா? நஷ்டமா? -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம்












Click it and Unblock the Notifications