Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துபாயில் மீலாது நபி விழா கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாய் அத்தரீகத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 34ம் ஆண்டு மீலாதுன்னபி பெருவிழா நிகழ்ச்சியை கடந்த 31ம் தேதி மாலை நடத்தியது.

இந்த நிகழ்ச்சி துபாய் லேண்ட்மார்க் விடுதியில், கலீபா நிர்வாகத் தலைவர் ஏ.பி. சகாபுதீன் பி.இ., எம்.பி.ஏ. ஹக்கியுல்காதிரி தலைமையில் மௌலானாமார்களின் முன்னிலையில் நடைபெற்றது.

இறை வசனங்களை ஓதி மௌலவி அப்துல் ஹமீது விழாவை துவக்கி வைக்க, அதைத் தொடர்ந்து ஹுவல் வுஜூத் பாடலை மதுக்கூர் முஹம்மது தாவூது பாட அதன் தமிழாக்கத்தை அபுல்பசர் வாசித்தார். நபிப்புகழ் பாடலை மதுக்கூர் ஹாஜா முகைதீன் பாடினார். இணை பொதுச் செயலாளர் கிளியனூர் இஸ்மத் வரவேற்புரை நிகழ்த்த, சையது அலி மௌலானா, முஹிப்புல்உலமா கீழக்கரை முஹம்மது மஃரூப் மற்றும் மௌலவி முஹம்மது அலி பிலாலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இவர்களைத் தொடர்ந்து முஹம்மது ஹனீப் ரஜா காதிரி பீஜாப்பூர் தனது வசீகரமான குரலில் நபிகள் நாயகத்தை புகழ்ந்து பாடிய கஸிதா உருது பாடல்களும், பெங்களூருவைச் சேர்ந்த முஹம்மது நபீல் பாடிய தமிழ் கஸிதா பாடல்களும் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது. சிறப்பு சொற்பொழிவை மௌலவி அல்ஹாபிழ் எஸ்.எம்.எஸ். ஹுசைன் மக்கீ மஹ்லரி நிகழ்த்தினார்.

நான்காம் ஆண்டாக மீலாதுன்னபி ஆன்லைன் கேள்வி பதில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அபுதாபி மௌலிது கமிட்டியில் இருந்து நாகூர் முஸம்மில், ஈமான் அமைப்பில் இருந்து எஸ்.எம். பாரூக், காயிதே மில்லத் பேரவையில் இருந்து ஹமீதுர் ரஹ்மான், ஸுன்னத் ஜமாஅத் பேரவை அப்துல் கஃபூர், காயல்பட்டினம், லால்பேட்டை, நெடுங்குளம் ஜமாஅத்தார்கள், பத்ரு சஹாபாக்கள் இல்லத்து நண்பர்கள், மற்றும் பெரும் திரளில் தமிழர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Milad un Nabi celebrated in Dubai

இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் நூருல் அமீன், அதிரை அப்துல் ரகுமான், அகமது இம்தாதுல்லா ஆகியோர் ஆன்லைனில் நேரடி ஒளிப்பரப்பு செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மதுக்கூர் ஹாதம் அப்துல் குத்தூஸ், அபுல்பசர், முகம்மது தாவூது, மதார்ஷா, சாகுல் ஹமீது, அதிரை ஷர்புதீன், ஓ.பி.யூ பஷீர், கோட்டைகுப்பம் முகைதீன், அலிஅக்பர், மன்னை அப்துல் மாலிக், பஷிருல்லா, அமீர்அலி, மதுக்கூர் அப்துல் ரகுமான், மன்னை ஷேக்தாவூது, ஹிதாயத்துல்லா, கிளியனூர் இஸ்மத் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிறைவாக மதுக்கூர் அமீர்அலி நன்றி உரை நிகழ்த்தினார் யா நபீ சலாம் அலைக்கும் யா ரசூல் ஸலாம் அலைக்கும் பைத்துடன் இனிதே நிகழ்ச்சி நிறைவடைந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+